Thursday, December 11, 2008

Titbits 8 : ரஜினியின் புதிய கீதை ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, சூப்பர் ஸ்டாரின் ஜாதகம் சொல்வது என்ன? etc.etc.,

1) ரஜினியின் புதிய கீதை ஏற்படுத்தியுள்ள பாதிப்பு

சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களை சந்தித்தபோது கூறிய "கடமையை செய். பலனை எதிர்பார்" என்னும் வாக்கியம் ஏற்கனெவே சென்னை மற்றும் தமிழகத்தின் ஆட்டோக்களில் பல இடம்பிடித்துவிட்டது.

அதன் பாதிப்பு பல ரசிகர்களிடம் தென்பட ஆரம்பித்து விட்டது. மன்றப் பணிகளில் ஆர்வம் காட்டாமலிருந்த பல ரசிகர்கள் அவரவர் பெற்றோரின் ஆசீர்வாதத்தோடு களமிறங்கி விட்டனர். (ரசிகர் மன்றப் பணிகளுக்கே சூப்பர் ஸ்டாரின் அந்த பேட்டி கௌரவத்தை அளித்தது என்பதை யாராலும் மறுக்க இயலாது.)

ரசிகர்கள் அல்லாதவர் களிடமும் அந்த வாக்கியம் பாதிப்பு ஏற்படுத்தியது என்பதும் உண்மை. "கடமையை செய். பலனை எதிர் பார்." சரி தானே? ரஜினி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்று பலர் கருதுகிறார்கள்.

இவர்களை தவிர ஒரு அரசியல் கட்சி தலைவரை கூட இந்த வாக்கியம் பாதித்திருக்கிறது என்பது தான் ஆச்சரியம். (அப்படித்தான் நான் நினைக்கிறேன்). சமீபத்தில் தனது கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதா மணமக்களை அங்கு தமது தொண்டர்களிடம் பேசுகையில் கூறியது இது.

"நீண்ட காலமாக கட்சிக்கு பாடுபட்டு வருகிறீர்கள். உங்களில் பலர் உழைப்பின் பலனை பெற்றிருப்பீர்கள். கழகத்திற்கு உழைத்து பலன் பெராதவர்களுக்கேல்லாம் நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். அதற்குரிய பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். அதற்க்கு நான் உத்தரவாதம் தருகிறேன்."

- இது எப்படி இருக்கு?

(அரசியல் அகராதியில் கடமையை செய்துவிட்டு பலனை எதிர்ப்பார்ப்பது என்றால் வேறு அர்த்தம் கூட இருக்கலாம். அது எனக்கு தெரியாது..!!)

ஒரு விஷயத்தை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். ரஜினி ஒன்றும் மேம்போக்காக அந்த வாக்கியத்தை கூறவில்லை. "கடமையை செய்தால் அதற்க்கு உரிய பலன் எப்போது கிடைக்கும் என்றால், அந்த கடமையை சரிவர குறைவின்றி செய்தால் தான்" என்று அதையும் ரஜினி அழுத்தம் திருத்தமாக கூறினார்.

ரஜினி கூறிய இந்த விளக்கம் கீதைக்கு எந்த வகையிலும் எதிரானது அல்ல. கீதையில் கூறப்பட்டிருப்பது அர்ஜுனன் போன்ற ஞானிகளுக்கே பொருந்தும். நாம் அதை போட்டு குழப்பிகொள்ளத் தேவையில்லை என்று தெளிவாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா அவர்களின் உரை பற்றிய தகவல் உதவி: எஸ்.ஆர்.வி.சேகர். (கவனிக்க எஸ்.வி.சேகர் அல்ல. எஸ்.ஆர்.வி.சேகர். இவர் நம் வலைத்தள நண்பர்.)

2) சூப்பர் ஸ்டாரின் ஜாதகம் சொல்வது என்ன?

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த செய்தி.

சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசத்திற்கான அசல் சாத்தியக்கூறுகள் பற்றி ஒரு புறம் ஒதுக்கி வைப்போம். இது குறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போமா?

இது சமீபத்திய கணிப்பு என்பதால் இங்கு தருகிறேன்.

"ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்..." இது ஏதோ சினிமாவுக்காக எழுதப்பட்ட பாடல் அல்ல. நிஜ வாழ்க்கைக்கும் சேர்த்து தான் எழுதப்பட்டது. கவிஞன் வாக்கு பொய்க்காது. காவிஞர் வாலி கூறியது போல பல அற்புதங்கள் ஒருங்கே அமையபெற்றது ரஜினியின் ஜாதகம். அதன் பலன்களை துல்லியமாக கணித்து கூற ஜோதிடத்தின் தந்தை அகத்திய முனிவரால் மட்டுமே முடியும். இருப்பினும் நம் ஜோதிடர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் கூறுகிறார்:

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் மாற்றமே இல்லை. அவரது லக்னம்-சிம்மம், ராசி-மகரம், நட்சத்திரம்-திருவோணம். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்ற ஒரு ஜோதிட பாடல் உண்டு. திருவோணம் நட்சத்திரத்திற்கென்று தனி நிர்வாக திறமை இருக்கும்.

சிம்ம லக்னம் (சூரியனின் லக்னம்), ராசி மகரம் (சனியின் ராசி), நட்சத்திரம் திருவோணம் (சந்திரனின் நட்சத்திரம்). இதில் ரஜினியின் உயிர் நெருப்பு (சூரியன்), உடல் தண்ணீர் (சனி). நீரும், நெருப்பும் எப்போதுமே மோதிக் கொண்டே இருக்கும். சூரியனுக்கும், சனிக்கும் பகையுண்டு.

இதன் காரணமாகவே அவர் விஷயத்தில் ஒரு ஊசலாட்டம் காணப்படுகிறது. ஆனால் சிம்ம லக்னம் ஸ்திர லக்னம் என்பதால், அவரது மனதில் நிலையான எண்ணங்கள் இருக்கும். எனவே அவரைக் குழப்பவாதி என்று கருதத் தேவையில்லை.

ஆனாலும், தற்போது அவருக்கு நடக்கும் அஷ்டமச் சனி 27/09/2009 அன்று முடிவடைவதால், அதன் பின்னர் அவர் சிறிது சிறிதாக அரசியலுக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 2010இல் வெளிப்படையாக சில விஷயங்களை அவர் தெரிவிக்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

அவரது ஜாதகப்படி ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

(நன்றி: tamil.webdunia.com, தகவல் உதவி: எம்.ராஜேஷ், செல்வராஜ்)

3) ஹைதரா பாத்தில் சூப்பர் ஸ்டார் - பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை

சூப்பர் ஸ்டார் எங்கு எப்போது செல்வார், இருப்பார் என்று யாராலுமே சரியாக கணித்து கூறிவிட முடியாது. காலையில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நீச்சல் பயிற்சி செய்துகொண்டிருப்பார். மதியம் பெங்களூரில் நண்பர்களுடன் சாப்பிட்டுகொண்டிருப்பார். மாலை ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பார். இது போல பல முறை நடந்திருக்கிறது. எனவே அவரது அசைவுகளை துல்லியமாக கூறுவது என்பது பெரிய பெரிய மீடியா ஜாம்பவாங்களுக்கே கூட சவால் தான்.

இதோ லேட்டஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் பிறந்த நாளை கொண்டாடாமல் சுல்தான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருப்பது குறித்து தந்தி செய்தி வெளியிட்டிருக்கிறது.

சுல்தான் படப்பிடிப்பு ஏற்கனே முடிந்துவ்ட்டது. இது கரெக்க்ஷன்ஸ் உள்ள பகுதிகளின் படப்படிப்பு.

அனிமேஷன் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நடிக்கிற வேலை என்ன என்று கேட்ப்பவர்களுக்கு...

அனிமேஷனை அப்படியே செய்வதைவிட, அந்த அனிமேஷன் தோற்றத்தில் உள்ள நபரை நடிக்கவைத்துவிட்டு அதை அப்படியே ட்ரேஸ் செய்து அதன் மீது 3D மாடலிங் செய்தால் தத்ரூபமாக இருக்கும். அதற்காகத்தான் இந்த படப்பிடிப்பு. ஒ.கே. ?

[END]