Tuesday, December 2, 2008

"ரஜினி சம்மதித்தால் அவரை திருமணம் செய்துகொள்ளத் தயார்!!" - பாலிவுட் நடிகை பரபரப்பு அறிவிப்பு

கிணற்றுத் தவளைகளும் சூப்பர் ஸ்டாரும்

தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாருக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறதோ அந்தளவு வெளிமாநிலங்களிலும் இருக்கிறது. இங்கிருக்கும் கிணற்று தவளைகளை உறுத்தும் ஒரே விஷயம் அதுதான். அந்த உறுத்தலின் வெளிப்பாடுதான் அவருக்கெதிரான அவர்களது அசைவுகள்.

கேரளா, ஆந்திரம், கர்நாடகா, பம்பாய், டில்லி, மற்றும் பல வட மாநிலங்கள், இண்டு இடுக்கில் கூட இருக்கும் அயல்நாடுகள் இப்படி எங்கெங்கு பார்த்தாலும் பறப்பது ஒரே கொடி - ரஜினி கொடிதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நிச்சயம் ரஜினிக்கு தனி இடம் உண்டு. அந்தளவு தமிழர்கள் இதயத்தை கட்டி போட்டிருக்கிறார் ரஜினி. அதே சமயம் அந்த இடங்களில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்களையும் அதே அளவு அவர் வசியப்படுத்தியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியத்திற்குரிய விஷயம்.

(உடனே குசேலன் தோல்வி எப்படியாம் அது இதென்று புள்ளி விபரங்கள் வேண்டாம். 2008 இங்கிலாந்து பாக்ஸ் ஆபிசில் 'தோல்விப்படம்' என்று முத்திரை குத்தப்பட்ட குசேலன் எப்படி இராண்டாம் இடம் பிடித்தது என்று யோசித்துப் பாருங்கள். மற்றவர்களின் வெற்றி பட வசூல், நம் தோல்வி படம் என்று கூறப்படும் படத்தின் வசூலுக்கு இணையாக இருக்கு. உதாரணத்துக்கு கில்லி வசூல் - 25 கோடி. படு தோல்வி என்று மீடியா எழுதித் தீர்த்த பாபா வசூல் - 25 கோடி.)

நான் ஸ்டாப்பாக போய்கொண்டிருக்கும் எந்திரன்

எந்திரன் படப்பிடிப்பு ஐஸ்வர்யா ராயால் அவ்வப்போது தடைபடுகிறது என்று புளுகு மூட்டைகளை அவிழ்க்கின்றன மீடியாவில் சில விஷம சக்திகள். எந்திரன் படப்பிடிப்பை பொறுத்தவரை திட்டமிட்டபடி எல்லாம் பக்காவாக போய்கொண்டிருக்கிறது. மழையால் செட் பாதிக்கப்பட்டபோது கூட படப்பிடிப்பு நிறுத்தப்படாமல், அலுக்காஸ் ஜூவல்லரியில் அது பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. (மர்மயோகி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுவதை பொறுக்க முடியாத சில வைத்தெரிச்சல் பேர்வழிகள் இப்படிப்பட்ட வக்கிர செய்திகளை பரப்புகின்றனர்.)

மற்றபடி ஐஸ்வர்யா ராய் எந்திரனில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். பாலிவூட் ஹிரோயின்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதை பெருமையான, பாக்கியமான விஷமாகத்தான் கருதுகிறார்கள். ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் லேட். அவ்ளவுதான். மற்றபடி அங்கிருக்கும் முன்னணி ஹீரோயின்கள் அனைவரும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆவலுடன் தான் உள்ளனர்.

பாலிவுட் நடிகைகள் மத்தியில் ரஜினிக்கு போட்டி

சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரியங்கா சோப்ரா, "ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் ஜேம்ஸ் பாந்து ஆகியோருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்ற கேள்விக்கு "ஜேம்ஸ் பாண்டைவிட ரஜினியுடன் நடிப்பதற்கு தான் முக்கியத்துவம் தருவேன்" என்று கூறினார். ஆங்கில செய்தித் தாள் ஒன்றில் வெளியான தகவல் இது. பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர பாளிவூடில் முன்னணி நட்சத்திரம் அவர்.

பிரியங்காவை தொடர்ந்து தற்போது ராக்கி சாவந்த் ரஜினியின் புகழை பாடியிருக்கிறார். ஆனால் இவர் ஒரு படி மேலேயே சென்று, "ரஜினியை அவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொண்டு இரு ஆண்டுகளாவது குடும்பம் நடத்துவேன்" என்று காமெடி கலந்த சீரியஸாக கூறியிருக்கிறார். (இணைக்கப்பட்ட கடிங்கில் அவரது கேள்வி பதிலை காண்க). மும்பையில் சிவாஜி முதல் நாள் முதல் காட்சிக்கே இவர் வந்து பெரிய அளப்பரையே பண்ணிவிட்டார். பல வட இந்திய சேனல்களில் ரஜினி பற்றி அருமையான பேட்டிகள் அளித்திருக்கிறார்.

இந்த மேற்கூறிய செய்திகளை மிக்ஸ் செய்து வேறு சில விஷயங்களை சேர்த்து இன்றைய மாலை மலரில் தனிச் செய்தியாக போடச் செய்தேன். ரஜினியை பற்றி அவதூறு பரப்பிவரும் சிலருக்கு இதன் மூலம் பதில் சொல்ல முடிந்தது மகிழ்ச்சி.

இன்றைய காலை DC யில் வந்த கேள்வி-பதில் உங்கள் பார்வைக்கு.

Her craze for Rajinikanth
Oh! I adore him and wish I could marry him if he permits. He is a charming person. Though he has got grown up daughters, he still looks so young, handsome and stylish in his movies.

So you have shifted interest from marrying Salman to Rajini?
No no! Salman is different. This is more of a ‘contract marriage’ for one or two years maybe more.

Deccan Chronicle 01/12/08

[END]