Friday, December 5, 2008

எந்திரனில் கிச்சு கிச்சு மூட்டப்போகும் காமெடிப் பட்டாளம்

திட்டமிட்டபடி, ஸ்மூத்தாக போய் கொண்டிருக்கிறது எந்திரன் படப்பிடிப்பு. சென்னையின் முக்கிய இடங்களில் காதும் காதும் வைத்தாற்போல படப்பிடிப்பு நடந்து வருகிறது. லொக்கேஷன் பற்றி தெரிந்துகொண்டு அங்கு யாரும் செல்வதற்கு முன், படப்பிடிப்பு முடிந்து விடுகிறது.

எனக்கு கிடைத்த தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். உண்மை விபரங்கள் சற்று முன்னர் பின்னர் இருக்கலாம்.

சென்னை சுற்றி நடக்கும் எந்திரன் படப்பிடிப்பு

சென்னையில் கிழக்கு கடற்க்கரை சாலை, அடையாரில் உள்ள ஒரு ப்யூட்டி பார்லர் மற்றும் தி.நகரில். உள்ள ஆலூக்காஸ் ஜூவல்லரி ஆகியவற்றில் எந்திரன் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து, சமீபத்தில் சென்னை கடற்கரை செவாலியே சிவாஜி சிலை அருகே உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகாமையில் செட் போடப்பட்டு ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. அடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்க்கை எழில் கொஞ்சும் டாப்ஸ்லிப்பில் எந்திரன் படப்பிடிப்பு

இதை முடித்துவிட்டு, எந்திரன் யூனிட் டாப்ஸ்லிப் பயணமாகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலையில் உள்ள ஒரு சுற்றுலா தலம்தான் டாப்ஸ்லிப். மூங்கில் காடுகள், யானைகள மற்றும் பறவைகள் சரணாலயத்துக்கு பெயர் பெற்ற இடம் இது. இயற்க்கை எழில் கொஞ்சும் பசுமையான காடுகள், மர வீடுகள் இதன் தனி அழகு.

மழை பெய்த பிறகு, பசுமை பூத்துக்குலுங்கும் தருணத்தில் டாப்ஸ்லிப் மிகவும் அழகாக இருக்கும்.

தற்போது தமிழகத்தில் பரவலாக பெய்த கன மழையையடுத்து, நீர் நிரம்பி டாப்ஸ்லிப் பகுதியில் இயற்க்கை எழில் கொஞ்சுகிறதாம். எனவே ஷங்கரால் உடனே லொக்கேஷன் ஒ.கே. செய்யப்பட்டுவிட்டது. சென்னை ஷெட்யூல் முடிந்த பிறகு டாப்ஸ்லிப் பயணமாகிறது எந்திரன் யூனிட்.

'அம்மாடியோவ்' - காஸ்ட்யூம் செலவு!!!

சூப்பர் ஸ்டாரையே 'அம்மாடியோவ்' என்று சொல்லவைத்திருக்கிறது படத்திற்கான காஸ்ட்யூம் செலவு. அதற்க்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மட்டுமே கிட்டத்தட்ட் ஐந்து கோடி ரூபாயாம். ஒரு படமே எடுத்துவிட கூடிய தொகை என்பதால், சூப்பர் ஸ்டார் மிகவும் தயங்கினாராம். இருப்பினும் ஷங்கர் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக சூப்பர் ஸ்டார் 'Go ahead' என்று பச்சைக்கொடி காட்டியதாக தகவல்.

காமெடி செய்யப்போவது யாரு.... நம்ம சூப்பர் ஸ்டாரைப் பாரு...!!

ரசிகர்களிடம் இருக்கும் முக்கிய கேள்வி, எந்திரனில் காமெடியை கையாளப் போவது யார்என்பது தான்...

சூப்பர் ஸ்டாருக்குள் இருக்கும் ஒரு அருமையான காமெடி நடிகரை மறந்துவிட்டீர்களா என்ன? பெரும்பாலான காமெடி காட்சிகளை சூப்பர் ஸ்டாரே கவனித்து கொள்வார். ரோபோவாக நடிக்கும் சூப்பர் ஸ்டாரே நம்மை சிரிக்க வைக்கும் பணியையும் பார்த்துக்கொள்வார் என்று தெரிகிறது. (ப்யூட்டி பார்லர் சீன் ஞாபகம் வருகிறதா? - வேலையைப் பாரும்மா, இது ஒரு ரோபோதான்!!)

இருந்தாலும் எந்திரனுக்கு துணையாக நம்மை கிச்சு கிச்சு மூட்ட மேலும் சில காமெடியன்களை களம் இறக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கருணாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். மனிதர் அட்வான்ஸ் கூட வாங்கியாச்சு. பாபாவுக்கு அடுத்து சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைகிறார் லொடுக்கு பாண்டி.

கருணாஸை தவிர எந்திரனில் கலகலக்கப் போகும் மற்றொருவர் லொள்ளு சந்தானம். எந்த நேரமும் இவரும் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. குசேலனில் நம்மை நற நறக்க வைத்தவர் எந்திரனில் கிச்சு கிச்சு மூட்டுவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம்.

குறிப்பு:

சூப்பர் ஸ்டாரைப் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் உங்களுக்கு சரியான தகவல்கள் தர rajinifans.com, envazhi.com மற்றும் நமது onlyrajini.com இருக்கும்போது பொய்களையே எழுதிக் குவித்து வரும் ரஜினி விரோத தளங்களான கப்ஸா வூட்ஸ், சிஃபி ஆகிய தளங்களை முழுமையாக புறக்கணியுங்கள்.

வலைத்தளம் நடத்துவதன் மூலம் ஏராளமாக சம்பாதிக்கும் மேற்படி தளங்கள் தங்கள் வாசகர்களுக்கு உண்மை செய்திகளையே தரவேண்டும் என்று நினைக்காதது பெரிய சோகம். ஒரு காலத்தில் தரமான செய்திகளை மட்டுமே (நம் எதிர்ப்பு செய்தியாக இருந்தாலும்) அளித்து வந்த சிஃபி தற்போது தரத்தில் மிகவும் கீழே இறங்கி கப்ஸா வூட்ஸுடன் தரமற்ற செய்திகளுக்கு போட்டிபோடுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை உள்ளபடி தெரிவிக்காமல் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையே வெளியிட்டு வக்கிரத்தை காண்பித்து வருகின்றனர். உங்கள் பொன்னான நேரத்தை மேற்படி தளங்களுக்கு சென்று வீணடிக்கவேண்டாம்.