Monday, December 15, 2008

உயிர் காக்கும் தானம் - 'ரத்த தானம்' செய்த நம் நண்பர்கள்

14/12/2008 - ஞாயிறு காலை - சென்னை கிண்டி பட்ரோட்டில் அமைந்துள்ள மௌன்ட் மெடிக்கல் சென்டரில் சூப்பர் ஸ்டாரின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினிபான்ஸ்.காம் சார்பில் ரத்த தான முகாம் இனிதே நடைபெற்றது.

முகாமுக்கு Rajinifans.com உறுப்பினர்ககள் திரளாக வந்திருந்து தம் ரத்தத்தை தானம் செய்தனர்.

முன்னதாக ரத்தம் பரிசோதிக்கப்பட்டு, அவரவர் க்ரூப் கண்டறிதல் மற்றும் இதர சோதனைகள் செய்யப்பட்டு, ரத்தம் பெறப்பட்டது. சராசரியாக ஒவ்வொவொருவருக்கும் ஆறு நிமிடங்கள் மட்டுமே செலவானது. மொத்தம் 33 பேர் ரத்த தானம் செய்தனர்.

அரசு ரத்த வங்கி சார்பாக பெறப்பட்ட இந்த ரத்தம் உடனடியாக அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

ரத்தம் அளித்த ரசிகர்களுக்கு உடனடியாக மினரல் வாட்டரும், பழ ரசமும், பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.

முடிவில் ரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துகொடுத்த டாக்டர் சச்சிதானந்தம் அவர்களுக்கு ரஜினிபான்ஸ்.காம் சார்பாக திரு. ரஜினி ராம்கி சந்தன மாலையும் சால்வையும் அணிவித்து கௌரவித்தார். ரசிகர்கள் அனைவரும் மருத்துவர் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு தம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

முன்னதாக முகாமிற்கு வந்த ரசிகர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்தார் ரஜினி ராம்கி. (முதல் படத்தில் ரத்தம் செலுத்துபவர்.)

முகாம் பற்றிய முழு தகவல், மற்றும் கலந்து கொண்டவர்கள், ரத்தம் செலுத்தியவர்கள் விவரம் Rajinifans.com ல் விரைவில் வெளியிடப்படும்.


[END]