Tuesday, March 3, 2009

Superstar's speech welcomed with thunderous applause and shouts

As gueseed by us, Superstar took part on second day of Kannada film industry's Platinum Jubilee Celebrations Amrutha Mahotsava and delivered a riveting speech.

The legendary star no doubt was the cynosure of all eyes yesterday at the event. When the news broke out about the star's presence in the event, the fans went berserk and couldn't be controlled and it was a tough time for the police to manage them. One could here, whistles and claps and catcalls "thalaivaaaaa" spelt from the hear and soul.

Over to media reports on the same:

Deccan Herald's complete report on Superstar's speech

Times of India, Bangalore edition has given a fantastic report on the same with audience's arousing response for Superstar and his speech. Pls read between lines....

KEEP POLITICS OUT
Times News Network

Bangalore: “Please don’t divide us. We are living like brothers. Please don’t bring politics into cinema,’’ this was the fervent appeal by superstar Rajnikant.

His words were welcomed with thunderous applause and shouts by the crowd on Monday, the second day of the platinum jubilee celebrations of Kannada cinema. As many as 108 personalities from various segments of the industry were felicitated.

The amity and effervescence of personalities from the Kannada, Telugu and Tamil industries sent a collective message — art transcends boundaries, languages and cultures. Rajnikant, Dasari Narayana Rao, Jayaprada, Prakash Rai, Prabhudeva and Rama Naidu shared the dais with the Kannada film fraternity and spoke in one voice against politicization of cinema.

“Politics is like an ocean, while film industry is a pond. If the ocean can’t solve its problems, how can a small pond do it?’’ asked Rajnikant. On Sunday, Kamal Haasan had appealed to keep politics away from cinema.

One person was sorely missed during the celebrations: Rajkumar. Every speaker remembered and praised him, from Jayaprada to Prakash Raj to ministers Shobha Karandlaje and Katta Subramanya Naidu.

Rajnikant, who was present till the end of the three-hour programme, advised Kannada film-makers to make films based on novels and stories available in Kannada. “The industry has produced monumental films based on novels of writers like Ta Ra Su and Indira. There are so many great works by Kuvempu, Shivaram Karanth and Bendre. I don’t know why they are not being utilized. It makes me sad.’’

RAJNI’S WISH: The Tamil superstar expressed his desire to work in a Kannada film. “I want to act in Dalawayi Muddanna. It suits my character. I love that character. I don’t know when I will be able to do it. I don’t know when God wills,’’ said Rajnikant.

Rare photo tribute: An exhibition of over 3,000 rare Kannada film stills taken by K M Veeresh, at the Palace Grounds on Monday, marked the ‘Photo tribute’ to the 75th year of the Kannada film industry. Photos dating back to the first talkie Sati Sulochana to the latest Namyajmanru took the visitors to a different world.

Remembering the icons: To mark the platinum jubilee celebrations, 75 books were released on 75 late cinema icons, including Gubbi Veeranna, Subbaiah Naidu, B R Panthalu, R Nagendra Rao, Rajkumar and Balakrishna. Their family members were felicitated.

Monday, January 5, 2009

Titbits 11: "மக்கள் செல்வாக்குள்ள ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்!" - சிரஞ்சீவி, "ரஜினி ஒரு அபூர்வ மனிதர்" - லியாண்டர் பயஸ் Etc, etc.,

1) "ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்" - சிரஞ்சீவி

தமிழக எல்லைகளில் உள்ள ஆந்திர மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய சிரஞ்சீவி நேற்று விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சிரஞ்சீவி அரசியல் கட்சி நடத்தும் விதத்தில் எனக்கு நிறைய மாற்று கருத்துக்கள் உண்டு. அவர் குறித்த ஏமாற்றங்களும் உண்டு. அது ஒரு புறம் இருக்கட்டும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பகிரங்கமாக தனது விருப்பத்தை தெரிவிப்பவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர்.

தமிழகத்திலும் நம்மை போல நடிகர் ஒருவர் கட்சி துவங்கினால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைக்கலாம். (அப்ப ஏற்கனவே கட்சி துவக்கியுள்ள நடிகர்கள் ? அவர்களையெல்லாம் யார் கணக்கில் சேர்த்தது..!) மேலும் சூப்பர் ஸ்டார் அவரின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த சூழ்நிலையில் "தமிழகத்தில் ரஜினிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதை புரிந்துகொண்டு அவர் அரசியலுக்கு வரவேண்டும்." என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சிரஞ்சீவி.

2) "சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர்" - டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்

சூப்பர் ஸ்டாரைப் பற்றி இதோ மற்றுமொரு பிரபலத்தின் அட்டகாசமான கருத்து. இன்று வெளியாகியிருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பேட்டியளித்துள்ளார்.

நான் ரஜினியின் பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பல படங்கள் என் "All time favourites". நான் சிறு வயதில் அவரை நேரில் சந்திக்கும் அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர் என்று தான் நான் கருதுகிறேன்.

கவனிக்க கேள்வியாளர் கேட்டதென்னவோ, ஏதாவது தமிழ் படங்கள் பார்த்திருக்கிறீர்களா என்பது தான். ஆனால் அதற்க்கு அவர் கூறியிருக்கும் பதில் தான் நீங்கள் மேலே படித்தது. தமிழ் சினிமா என்றாலே ரஜினி தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருகிறார். இந்த நிலையில் அவரின் செல்வாக்கை அளக்கிறேன் என்று அவரை சிறுமைப்படுத்த முயலும் கைப்புள்ளைகளை என்னவென்று சொல்வது...?

(செய்தி உதவி: மணிகண்டன்)

3) புத்தாண்டை முன்னிட்டு ஸ்டார் தியேட்டரில் முத்து - தூள் கிளப்பிய நம் ரசிகர்கள்

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள திரையரங்கம் ஸ்டார். இங்கு பெரும்பாலும் இரண்டாம்கட்ட அல்லது மூன்றாம் கட்டமாக ரிலீசாகும்படங்கள் தான் திரையிடப்படும். சில சமயம் பழைய படங்கள் கூட திரையிடுவார்கள். நம் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்கள் இங்கு அடிக்கடி ரிலீசாகும்.

அப்படி நம் படங்கள் திரையிடப்படும்போது திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நம் ரசிகர்கள் பலர் தவறாது வந்து படங்களை கண்டுகளிப்பர்.

புத்தாண்டையொட்டி இங்கு சூப்பர் ஸ்டாரின் முத்து திரையிடப்பட்டது. 31 ஆம் தேதி இரவுக்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மொத்தம் சுமார் 250 - 300 பேர் இருந்தனர் அரங்கில். படம் ஆரம்பித்து தட்டில் கார்ட் போட்டதிலிருந்து இடைவேளை வரை நம் ரசிர்கள் பலர் ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் என திரையரங்கை அதகளப்படுத்திவிட்டனர்.

ஸ்க்ரீன் முன்பாக ஓயாமல் மெழுகுவர்த்தி, கற்பூரம் என்று கணக்கிலாமல் ஏற்றி வைத்து, "சூப்பர் ஸ்டார் வாழ்க" "தெய்வமே" "டாக்டர் ரஜினிகாந்த்" என்று கோஷம் போட்டுகொண்டேயிருந்தனர். ஒருவன் ஒருவன் முதலாளி, அம்ற்றும் தில்லானா பாடலின் போது கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் ஸ்க்ரீன் முன்பாக உற்சாக நடனமாடினர். முக்கிய வசனங்களின் போது விசில் சத்தம் பறந்தது.

சரியாக புத்தாண்டு பிறந்த நேரத்த்தில் அதாவது இரவு 12.01 க்கு ஜெயபாரதி சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் பற்றி "இந்த மண்ணுக்கு சொந்தக்காரனே அவன்தான்டா. இந்த மண்ணை ஆளவேண்டியவனே அவன்தான்டா." என்று கூறும் வசனம் தோன்றியது. தற்செயலாக இருந்தாலும் மொத்தத்தில் புத்தாண்டு கலக்கலாக பிறந்துள்ளது.

படத்தை அன்றிரவு அங்கு பார்த்த நம் நண்பர் ஒருவர் சொன்னது இது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் முத்து திரைப்படம் அடிக்கடி டி.வி.க்களில் ஒளிபரப்பான படம் என்பது தான். சமீபத்தில் கூட இப்படம் சன் டி.வி.யில் ஒளிபரப்பட்டது. அப்படி இருந்தும் மக்களை தியேட்டருக்கு இழுக்க சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே முடியும்.

4) திருமங்கலத்தில் தூள் பறக்கும் காமெடி காட்சிகள்

திருமங்கலத்தில் தினசரி காமெடி கலாட்டா தான். உபயம்: நம் கேப்டன். அவரின் உரையை கேட்டால் வயிறு குலுங்க சிரிக்கலாம். மன அழுத்தம், மன சோர்வு உள்ளிட்ட பல நோய்களுக்கு அது மாமருந்து. போதாகுறைக்கு அண்ணன் சுப்ரீம் ஸ்டார் வேறு களத்தில் உள்ளார். மக்களை கிச்சு கிச்சு மூட்டுவதில் இருவருக்கும் கடும்போட்டி நிலவுகிறது.

உதாரணத்துக்கு கேப்ப்டனும் சுப்ரீம் ஸ்டாரும் கூறிய சில டயலாக்குகளை படியுங்களேன். உங்களுக்கே புரியும்.

கேப்டன்: "பொதுமக்களுக்கு பணம் கொடுத்து எனது பிரசாரத்துக்கு வரவிடாமல் சில கட்சியினர் தடுக்கின்றனர். தே.மு.தி.க வேட்பாளர் தவறு செய்தால் கட்டி வைத்து உதைப்பேன். வாக்காளர்களுக்கு சில கட்சியினர் செல்போன் கொடுத்துவருகின்றனர். அப்படி கொடுத்தாலும் எனது வெற்றியை தடுக்க முடியாது. இந்த தேர்தலுக்கு கிட்டத்தட்ட நூறு கோடிவரை செலவழிக்கிறார்கள். எல்லாம் என் வெற்றியை தடுக்கத் தான். இங்கு ஒரு நடிகர் பிரசாரத்துக்கு வரப் போவதாக அறிந்தேன். (சரத் குமாரை மறைமுகமாக குறிப்பிட்டு). நடிகர்களை எல்லாம் நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் முன் நடிப்பார்கள்" என்று வீராவேசமாக பேச, "யோவ் அப்போ நீ யாருய்யா" என்று ஒருவர் சவுண்ட் விட, கேப்டன் உடனே கப்சிப்.

அதேபோல், வேறொரு கிராமத்தில் மக்களை பார்த்து, "நீங்கள் யாருக்கு ஒட்டுபோடுவீர்கள்?" என்று ஆவலாக கேட்க, "தி.மு.க.வுக்கு" என்று பாதி கூட்டமும், "அ.தி.மு.க.வுக்கு" என்று மீதி கூட்டமும் கோரசாக காத்த, நொந்தே போய்விட்டார் கேப்டன். (இது அவர் ஆதரவு நாளிதழிலேயே இன்று வந்துள்ள செய்தி!)

சரி அப்படின்னா, இவர் பிரசாரத்துக்கு எதுக்கு கூட்டம் வருதுன்னு கேக்குறீங்களா? அட எல்லாம் அவர் பண்ற காமெடியை ரசிக்கத்தான். இலவசமா காமெடி காட்சி கிடைச்சா நீங்க ரசிக்க மாட்டீங்களா என்ன?

பிரசாரத்துக்கு செல்கையில் தி.மு.க. வின் தேர்தல் அலுவலகம் ஒன்றை பார்த்து வண்டியை நிறுத்தி கேப்டன் சவுண்ட் விட, பதிலுக்கு அவர்கள் கற்களை தூக்க, கேப்டன் ஓட்டம் பிடித்தது தனிக்கதை.

ஒ.கே. அடுத்து சுப்ரீம் ஸ்டார் என்ன சொல்றாருன்னு பார்போம்.

சுப்ரீம் ஸ்டார்: (இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்).

எங்கள் இலக்கு பாராளுமன்ற தேர்தல் தான். இதற்காக வரும் ஜனவரி 21 தேதி முதல் ராதிகாவும் நானும் அடுத்தடுத்து சூறாவளி பிரச்சாரம் செய்யவிருக்கிறோம். மற்றவர்கள் பணம் கொடுப்பதை எதிர்க்கும் விஜயகாந்த் அவர் மட்டும் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கலாமா? இந்த தேர்தல் நியாயமாக நடந்தால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

சுப்ரீம் ஸ்டாரினி : (அதாங்க ராதிகா)

என் கணவருக்கு குடிகாரர் என்ற பெயர் கிடையாது. சட்டசபைக்கு சிலர் குடித்துவிட்டு வருவதுண்டு. இப்படியெல்லாம் நடக்குமா என்று என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.

எப்படி... போட்டி போட்டுகொண்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் அல்லவா?

இப்படி தினம் தினம் திருமங்கலத்தில் காமெடி திருவிழாதான்.

[END]

Sunday, January 4, 2009

ரஜினியின் செல்வாக்கை அளக்க கிளம்பியுள்ள கைப்புள்ளைகள்

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

ஜினியின் செல்வாக்கை நாங்கள் அளக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியுள்ள சில கைப்புள்ளைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

இளகின இரும்பைக் கண்டால் ஓங்கி அடிப்பான் கொல்லன் என்பது போல ரஜினி என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம்...யார் கேட்கப்போகிறார்கள் என்கின்ற நினைப்பு இவர்களுக்கு. (மற்ற நடிகர்கள் கதை அப்படியல்ல. ஏதாவது விழாக்களில் சம்பந்தப்பட்ட நிருபரை அந்த நடிகர்களின் தந்தைக்குலமோ அல்லது பி.ஆர்.ஒ. வோ பார்த்தால் வறுத்தெடுத்து விடுவார்கள். இதற்க்கு பயந்தே இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.)

கஞ்சன் வைத்த எச்சில் இலை விருந்து கதையாக கஞ்சனைப் பற்றி கவலைப்படாத சிலர் மட்டும் சென்று வந்த (ஏமாந்த) அந்த விருந்து ஊரிலயே பெரிய விருந்தாம். அது போல இருக்கிறது இவர்கள் வாக்கெடுப்பு நடத்தி ரஜினியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக அங்கலாய்த்து கொள்வது.

"இது ஒரு குப்பைத் தொட்டி!" என்று பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே புறக்கணித்த, குறிப்பாக ரஜினி ரசிகர்கள் முற்றிலும் புறக்கணித்த அந்த வலைத்தளம் உலகத் தமிழர்களிடம் (??!!) வாக்கெடுப்பு நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளதாம். அதன் படி ரஜினி கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் இடத்திலிருக்கிறாராம். இதெப்படி இருக்கு?

"நாங்கள் ஒரு குண்டு சட்டி. இந்த குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வருபவர்களை வைத்து எங்கள் வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கிறோம்!" என்று அந்த தளம் ஒரு முன்னுரை கொடுத்துவிட்டு முடிவுகளை அறிவித்தால் நன்றாக இருக்கும்.

ஜஸ்ட் ஒரு ஆவரேஜ் வெற்றிப் படம் கொடுக்க கூட துப்பு இல்லாத நடிகர்கள் எல்லாம் அந்த வாக்கெடுப்பில் பெற்றிருக்கும் வாக்குகள் இருக்கிறதே.... அட போங்கப்பா.... அது இன்னும் பெரிய காமெடி.

………………………………………………………………………………………………………………

*This post is an outcome due to the anguish of one of our fan who told me about this.

Tom, Dick and Harry: "We are ready to gauge Rajini's fame!!"

When the whole Tamil speaking population of the globe is aware of the international acclaim of Superstar, it is really funny to see some jobless Tom, Dick and Harrys' attempts to gauge his fame by mere website voting.

"When the cat's away the mice will play". So as Superstar's tolerance to such things gives room for these crap sites to blabber like this. But this is not the case in writing about other actors. Concerned actor's papa or PRO will blast the particular writer or reporter if he is spotted in any event. So they won't dare to write like this about other actors.

The concerned Tamil website has been stamped as DUSTBIN and ignored by the common people particularly by Rajini fans long back itself and nobody cares to visit that site. But the website claims that it conducted the polls among Tamilians (??!!) all over the world and have published the results. It has expressed its concern that Superstar Rajini is trailing in the third place for the past three years. How is it? ha...ha...ha...!

It is rib-tickling to note the huge votes garnered by some actors in that poll, who are struggling to give even an average hit movie for years. Note: For years!!

………………………………………………………………………………………………………………

[END]

ரஜினியின் அறிவிப்பால் நாச்சிக்குப்பம் பெற்றுள்ள திடீர் அந்தஸ்து; மனைகளின் விலை கடும் உயர்வு!!

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

Friends, I have provided the complete translation of the article at the end. - Sundar

………………………………………………………………………………………………………………

ரு சாதரண கல்லின் மீது தலைவர் கைவைத்தால் கூட அது விலை மதிக்கமுடியாத மாணிக்க கல்லாகிவிடும். அப்படியிருக்க ஒரு ஊரை குறிப்பிட்டு "இது தான் என் பூர்வீக இடம். என் பெற்றோருக்கு இங்கு நினைவிடம் எழுப்ப ஆசைப்படுகிறேன்" என்று சொன்னால்........?

நாச்சிக்குப்பம் பெற்றுள்ள திடீர் அந்தஸ்து

நேற்று வரை ஒரு சாதரண சிற்றூராக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்த நாச்சிக்குப்பம், சூப்பர் ஸ்டாரின் பூர்வீக கிராமம் என்று தெரிந்த பின்னர் ஓவர் நைட்டில் ஒரு VVIP அந்தஸ்தை பெற்றுவிட்டது. அதுவும் அவர் அங்கு தன் பெற்றோருக்கு நினைவு மண்டபம் அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டவுடன் கிட்டத்தட்ட ஒரு சுற்றுலாத் தலமாகிவிட்டது.

கேட்பாரற்று கிடக்கும் இடத்தையே பிளாட் போட்டு பெரிய விலைக்கு விற்றுவிடும் நம்ம ரியல் எஸ்டேட்காரர்கள் நாச்சிக்குப்பம் பற்றி சூப்பர் ஸ்டார் கூறியவுடன் சும்மா இருப்பார்களா? அந்த இடத்தில் தற்போது காலியிடங்களின் விலை தாறுமாறாக எகிறிவருகிறது. மனைகளின் விலை மட்டுமின்றி நாச்சிக்குப்பத்தில் சொத்துக்களின் மதிப்பும் கடுமையாக உயர்ந்துவருகிறது. நாச்சிக்குப்பத்திற்கு கிடைத்துள்ள இந்த திடீர் நட்சத்திர அந்தஸ்தால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காடிவருகின்றனர். ஒரு ஏக்கர் தற்போது நாசிக்குப்பத்தில் 40 லட்சத்துக்கு விலைபோகிறது. வருங்காலத்தில் இது மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும்!!

இன்றைய தினமலர் இது குறித்து இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் அண்ணன் சத்யநாராயணா ராவ் இங்கு வந்ததாகவும் அங்கு அவர்கள் குடியிருந்த வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பார்வையிட்டதாகவும் பின்னர் அந்த ஊர் கோவிலுக்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் தூரத்து உறவினர்கள் சிலர், சத்யநாராயணா ராவுடன் பேசியதாகவும், கடந்த கால நினைவுகளை அவருடன் அசைபோட்டதாகவும் தெரிகிறது.

தற்போது மார்கழி மாதம் நடைபெற்றுவருகிறது. தை மாதம் பிறந்தவுடன் (தை பிறந்தால் வழி பிறக்கும்!!) இது குறித்த பணிகள் துவங்கப்படும் என்று அங்கு ரசிகர்களிடம் சத்யநாராயணா உறுதி தெரிவித்திருக்கிறார்.

சென்னை மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த பல ரியல் எஸ்டேட் முதலாளிகள் தினசரி நாச்சிக்குப்பத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அங்கு சுற்று வட்டாரத்தில் இடங்களை வாங்கி குவிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரைப் போல எதிர்காலத்தில் நாச்சிக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி தொழில்வளம் சார்ந்த ஒரு பெரிய மையமாக மாறும் என்பது உறுதியாகிவிட்டது.

சும்மாவா பின்னே? தமிழகத்தை வருங்காலத்தில் செதுக்கப்போகும் சிற்பி ஒருவரின் பூர்வீக ஊராயிற்றே....

………………………………………………………………………………………………………………

Translation

The Man of Midas touch Rajini, converts the tiny village into a gold mine

Nachikuppam gains VVIP status

We all know that Superstar is a Man of Midas touch. Just imagine what would happen to a small village like Nachikuppam when he says, "It's my ancestral home place. I would like to raise a Memorial to my parents there..!!"

The village which is less known to the outsiders till previous night gained international fame when Superstar said that it is his ancestral place in his fans' meet. The tiny village suddenly wore a VVIP status. And it has turned more or less a tourist spot after his announcement of to-be built memorial there.

Will our real estate giants who sell even an useless land at unimaginable price stay cool after this? The price of vacant lands in and around Nachikuppam is shooting up to exorbitant prices. Not only lands the property value including newly constructed houses and old houses also has shot up. The residents of Nachikuppam are in euphoric mood because of this. Presently a single is acre is costing near Rs.40 lakhs there. It is expected that the price will shoot up in forthcoming days.

Today's Dinamalar has comeup with a news regarding this. It is said that Superstar's brother Mr.Sathyanarayana Rao came to the small town last 27th and visited various places including their ancestral home and street. He also had a chat with their distant relatives who were dwelling there for decades. Later Mr.Sathyanarayana Rao paid visit to the local temple. Before starting he has assured to local fan club members that the process for memorial construction and land acquisition would start in coming Thai month. (Jan 15th).

The real estate brokers in and around Chennai and Krishnagiri are thronging to Nachikuppam daily and buying the lands in large spree. Like Sriperumbudur it is expected that Nachikuppam would turn into industrial and wealth hub in future.

Why not? Isn't the ancestral place of a sculptor who is going to sculpt modern Tamil Nadu....?

………………………………………………………………………………………………………………

[END]

Sceintist Rajini and Medico Aiswarya Rai - Endhiran Update

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

சயன்டிஸ்ட் ரஜினி, மருத்துவ மாணவி ஐஸ்வர்யா ராய் - Endhiran Update

சும்மா வேலூரையே அதகளப்படுத்தி விட்டார்கள் நம் ரசிகர்கள். இப்படி ஒரு கூட்டத்தை வேலூரில் ஷங்கர் எதிர் பார்க்கவில்லை. விடுமுறை காலத்தில் படப்பிடிப்பை நடத்தியதற்கே இப்படியென்றால் வேலை நாட்களில் நடத்தியிருந்தால்?

VIT யில் படப்பிடிப்பை பார்க்க நேர்ந்தவர்கள் கூறும் அனுபவம் வித்தியாசமானது. எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்த விபரத்தை நான் வெளியிட விரும்பவில்லை. இருப்பினும் ஒரு சிறிய அவுட்லைன். ஷூட்டிங் பார்த்தவர்களிடம் நமது நண்பர்கள் பேசி, பிறகும் நம்மிடம் அதை தெரிவித்தனர். ஸோ, just enjoy and forget. உண்மை விபரங்கள் சற்று முன்னர் பின்னர் இருக்கலாம்.

ஐஸ்வர்யாவிடம் ரஜினி கோரிக்கை

மிகவும் திறமைசாலியான, படிப்பில் படு சுட்டியான மருத்துவக் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ராய். அவர் தனது ஆராய்ச்சியில் உதவியாளராக சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் விஞ்ஞானி ரஜினி, அவரிடம் சென்று அதற்கான கோரிக்கையை வைப்பது போலவும் அதற்க்கு ஐஸ்வர்யா ராய் மறுத்து பிகு செய்வது போலவும் (சும்மா லுல்லுலுவாய்க்கு தான்) காட்சிகள் எடுக்கப்பட்டன. பார்ப்பதற்கு படு ஸ்லிம்மாக உண்மையில் ஒரு மருத்துவ மாணவி போலவே ஐஸ்வர்யா ராய் காட்சியளித்தார். அதற்கேற்றார்போல அவர் கழுத்தில் காலேஜ் ஐ.டி. கார்ட், கையில் ஒரு ஸ்டெதஸ்கோப், வெள்ளை நிற கோட் என்று சகலமும் பர்ஃபெக்டாக காணப்பட்டது.

எத்தனை வேடம் மொத்தத்தில்?

தொடர்ந்து சில நாட்கள் படப்பிடிப்பை பார்த்தவர்கள் சற்று குழம்பித்தான் போனார்கள். ரஜினிக்கு இதில் எத்தனை வேடம் தான் என்று. காரணம் ஒரு நாள் French Beard உடன் படு ஸ்டைலாக முழுக்கை சட்டை ஜீன்ஸில் காணப்பட்ட ரஜினி அடுத்த நாள் மீசையின்றி கருநீலம் மற்றும் கருப்பு பேன்ட் அதற்க்கு தோதான கூலிங் க்ளாஸ் என்று ஸ்டைலிஷாக காணப்பட்டார். (அநேகமாக இது ரோபோவாக இருக்க கூடும்).

சுற்றுலாத் தலமாக மாறிய VIT

படப்பிடிப்பை தூரத்திலிருந்து பார்த்த ரசிகர்கள் ரஜினியின் உடை அதன் நிறம், அவரின் கெட்டப், சின்ன சின்ன மேனரிசம் என்று ஒன்று விடாமல் தங்களால் முடிந்ததை பார்த்து அதை நண்பர்களுக்கு சொல்லி சொல்லி மகிழ்கிறார்கள். பொற்கோவில் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா மற்றும் வழிப்பாட்டு தளங்களுக்கு கேப்கள் மற்றும் பஸ்களில் வருபவர்கள் (குறிப்பாக சபரிமலை சென்று திரும்புபவர்கள்) எந்திரன் ஷூட்டிங் பற்றி கேள்விப்பட்டதும் VIT க்கு வண்டியை திருப்பிவிடுகின்றனர். இதனால் VIT மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் கடந்த வாரம் நல்ல பிசினஸ். (வேலூர் நண்பர்கள் கூறியது!)

படப்பிடிப்பு வளாகத்தில் கேமிரா மற்றும் கேமிரா செல்போன்கள் அனுமதிக்கப்படாததால் புகைப்படம் எடுக்க நினைத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு சிலர் மட்டும் தொலைவிலிருந்தே தங்கள் உயர் ரக கேமிராவில் ZOOM செய்து படமெடுத்தனர். "எந்திரன் ஒரு தந்திரன், ரஜினி அவ்ளோ தான்" என்றெல்லாம் கவர் ஸ்டோரி எழுதித்தீர்த்த பத்திரிகை ஒன்று கவரேஜுக்காக தனது டீமையே ஸ்பெஷலாக அனுப்பியிருந்தது தான் உச்சகட்ட காமெடி.

தற்போது எந்திரன் கேம்ப் சென்னைக்கு மாறியாகிவிட்டது. விரைவில் பாடல் காட்சிக்காக குலுமனாலி கிளம்பவிருக்கிறது ஒட்டுமொத்த டீமும்.

………………………………………………………………………………………………………………

English Translation

Scientist Rajini & Medico Aishwarya Rai

Endhiran's Vellore schedule has already get completed and the crew has moved to Chennai last weekend. Our fans created a lot of fret and frenzy at VIT and its surroundings. Shankar didn't expect such a restless crowd even during holidays.

It was a unique experience for those who had the luck to have a glimpse of the shooting. I don't want to reveal the details. However i give a small outline straight away from those who watched the shoot. (through my Vellore friends).

Rajini's appeal to Aishwarya Rai

Aiswarya Rai is a meritorious medical student who always looks forward for challenging opportunities. The great and nationally acclaimed scientist Rajini wants to keep her as an assistant for his new vital project on Robotics. So, he goes to the National Research Centre & Medical college to meet her and persuade for this. But she acts pricey for that. Aiswarya Rai was looking like a perfect medico with stethescope & college uniform in her arms with college ID card hanging around her neck.

How many roles for Superstar?

Those watched the shoot continously for a few days get cofused regarding the number of roles that Superstar is acting in. Because one day he was spotted with Neat full shirt with jeans in a french beard (Scientist). The next day without moustache in a dark shirt and matching pants aka Aiyyampettai Arivudai Nambi Kaliyaperumal Chandran as in Thillu Mullu. (Probably this must be the Robot).

Fans keen watching the details

Fans who were watching the shooting from the distance didn't fail to notice even a minute mannersim of Superstar, details of his outfit and his makeup. Instantly they were seen relaying the same to their near and dearones. Pilgrimages and touristers who were heading for or returning from Golden Temple, adjacent tourist and religious spots were seen redirecting their vans and cabs to the shooting spot. Particularly those who were returing from Sabarimala. Due to this, restaurants and refreshment stalls had a sound business last week. (As told by our Vellore friends)

Camera phones or Digital cameras were not allowed inside the shooting spot and so it was very hard job to take snaps. A few who possessed hi-end cameras had luck to take snaps from quite distance with ZOOM operation. Others could simply stare at them. What the highlight was a magazine group which indulged continously in defaming Superstar sent a special team to VIT to cover the shooting news.

The Endhiran crew which is in Chennai may kick off to Kullu Manali anytime to shoot a song sequence.

………………………………………………………………………………………………………………

[END]


உலக சரித்திரத்தின் அடுத்த அத்தியாயமே...

ந்த பிறந்த நாளுக்கு நம் ரசிகர்கள் நலத் திட்ட பணிகள் பலவற்றை செய்து அசத்தியதோ டல்லாமல் , வழக்கமாக வைக்கும் பேனர்கள், எழுப்பும் போஸ்டர்கள் ஆகியவற்றையும் வித்தியாசமாக செய்து அசத்தி விட்டார்கள்.

அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது சின்மயா நகரில் நான் பார்த்த ஒரு பேனர். "உலக சரித்திரத்தின் அடுத்த அத்தியாயமே...." என்று சூப்பர் ஸ்டாரை அழைத்த அந்த பேனர் என்னை மிகவும் கவர்ந்தது. முதலில் பைக்கில் அந்த இடத்தை வேகமாக கடந்து சென்று விட்டேன். அட, அந்த பேனர் ஏதோ வரைபடம் (MAP) போட்டு வித்தியாசமாக இருக்கிறதே என்று திரும்பி வந்து பார்த்தால், வாவ் அசந்து விட்டேன்.

உலக நாடுகள் பலவற்றை மார்க் செய்து அந்தந்த நாட்டில் தோன்றிய தலைவர்கள் பெயரை ஹைலைட் செய்து, இந்தியாவுக்கு வாழ்ந்த மஹாத்மாவையும் தற்போது வாழும் மஹாத்மாவையும் ஹைலைட் செய்திருந்தனர். (அந்த ஐடியாவை கேப்டன் ரசிகர்கள் இனி Copy & Paste தான்!!).

இந்த கணக்கு எப்படி?

எந்திரனின் உலகளாவிய ரிலீஸ், பாபா படத்தில் ஜோதிடர் விஜயகுமார் கூறும் வாக்கு, எதைச்சையாக இந்த ரசிகர்கள் எழுப்பியுள்ள பேனர் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்...!! நல்ல திட்டங்களை வகுக்க, செழுமையை பெருக்க, தீமைகளை கழிக்க, அரசியல் அராஜகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க, ஒரு தலைவன் உலக அளவில் தயாராகிக்கொண்டிருக்கிறான் என்பது புரியும்.

(Double click the image to ZOOM bigger)

என்ன ஒரு பிரமாதமான யோசனை... பேனர் எழுப்பிய அந்த ரசிகர்களை பாராட்டுகிறேன். ஒரே போக்கில் சிந்திக்காமல் தமது சிந்தனையை அகலப்படுத்திய அந்த ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பக்க வாட்டில் உள்ள பேனரில், "இந்தியாவின் இயந்திரனே..." என்னும் வாசகத்தையும் அதற்க்கு கீழே "மலரினும் மெல்லிய மனம் படைத்த மன்னனுக்கு..." என்ற வாசகத்தையும் காணத்தவறாதீர்கள்.

பேனரை பெரிதாக பார்க்க டபுள் க்ளிக் செய்யவும். ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் தகவலும் நன்கு தெரியும்.

………………………………………………………………………………………………………………

நீங்களும் இது போன்ற படங்கள் அனுப்பலாம்

ரசிகர்கள் தங்கள் ஊரில் இது போன்று பேனர்கள் போஸ்டர்கள் ஏதாவது கண்டால் அதை படமெடுத்து அனுப்பலாம். இங்கு தக்க முன்னுரையுடன் பிரசுரிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:
simplesundar@gmail.com

………………………………………………………………………………………………………………

[END]

Thursday, January 1, 2009

Wish you a Happy & Prosperous New Year!!

Wednesday, December 31, 2008

Rajini’s Enthiran headed for Hollywood

Rajini’s Enthiran headed for Hollywood

Mid-day, Bangalore

Sun Pictures is all set to make director Shankar’s dream of making it to Hollywood come true. It’s on the verge of a tie-up with HBO which will see Enthiran being released in the West simultaneously.

Enthiran’s budget has now almost reached a record of sorts — Rs 200-crore, sources say.

Enthiran will be subtitled in English and released in Hollywood simultaneously, making it the biggest opening for the film industry. Rajinikanth’s Shivaji had raked in good money overseas and has made things easier for Shankar.

The crew is about to finish the shoot at VIT University College in Vellore. The next stop is Top Slip and Valparai and the crew will then move to Kulu Manali next year.


Tuesday, December 30, 2008

"சூப்ப்பர்ர்ர் ஸ்டார் வாழ்க" - ரசிகர்களால் அதிர்ந்த வி.ஐ.டி. வளாகம்!!

வேலூரில் எந்திரன் படப்பிடிப்பு, சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என்று தெரிந்தது தான் தாமதம், சாரை சாரையாக நம் ரசிகர்கள் நாள்தொறும் வி.ஐ.டி. க்கு படையெடுத்து வருகின்றனர். உள்ளே அனுமதிக்கப் படாவிட்டாலும் வெளியே இருந்து படப்பிடிப்பு நடக்கும் அந்த இடத்தை பெருமையுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

பொதுவாக விடுமுறை காலத்தை விரும்பும் மாணவர்கள், "அடடா இப்போது பார்த்து விடுமுறை சீசனாக போய் விட்டதே" என்று வருத்தப்படுகின்றனர்.

இருப்பினும் உள்ளே செல்ல நம் ரசிகர்களுக்கு தெரியாத டெக்னிக்கா? தங்கள் யூனிவெர்சிட்டி ஐ.டி. கார்டை காண்பித்து, 'பயோ-டெக் ப்ராஜெக்ட்' என்று கூறி நம் ரசிக மாணவர்கள் சிலர் உள்ளே புகுந்துவிட்டனர். சிறிது தூரத்திலிருந்து சூப்பர் ஸ்டாரை தரிசித்தவர்கள், தங்கள் அனுபவங்களை அனைவருக்கும் சொல்லி சொல்லி புளங்காகிதமடைகின்றனர்.

கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ்

அன்று அவர்கள் பார்த்தபோது தலைவர் இருந்த தோற்றம்: கருப்பு டி.ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், கருப்பு கூலிங் க்ளாஸ் (வாவ்!!) - மீசையின்றி!! பார்ப்பதற்கு 'தில்லுமுல்லு' அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் போல அவர் இருந்ததாக கூறப்படுகிறது. புகைப்படம் எடுக்க கடும் கட்டுபாடுகள் இருந்தபடியால் படம் எதுவும் எடுக்க இயலைவில்லை. (தகவல் உதவி: ரோபோ சத்யா)

படப்பிடிப்பில் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டத்தை பற்றியும் நேற்று எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்தும் இன்றைய தினத் தந்தி வேலூர் பதிப்பில் வந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது. எவ்வித பாரபட்சமும் இன்றி எந்திரன் செய்தியை தவறாது எங்களுக்கு அளித்து வரும் தந்தி குழுமத்திற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

//ரஜினிகாந்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வி.ஐ.டி. பல்கலைகழகத்தின் வெளியே குவிந்திருந்தனர். ஏராளமான ரசிகர்கள் வெளியே நின்றிருக்கும் தகவலை கேட்ட ரஜினிகாந்த் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையை அசைத்தார். ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து சூப்பர் ஸ்டார் வாழ்க என கோஷமிட்டனர்.

ரசிகர்கள் குவிந்ததால் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பட்டாபி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்றும் பட யூனிட் குழுவினரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.//

முழு செய்திக்கு இணைக்கப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பார்க்கவும்.

[END]

தலைவரின் நிகழ்ச்சிகளுக்கு என்றுமே மவுசு தான்...

ரண்டு நாட்களுக்கு முன்பு, சன் மியூசிக் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் அவர்கள் ஷூட் செய்த பழைய திரைப்பட விழாக்களை, கலைநிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்துவருகின்றனர்.

அந்த வகையில் பொதுவான அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்ற கலை விழாக்களை அடுத்து அவர்கள் அதிகம் ஒளிப்பரப்புவது நம் சூப்பர் ஸ்டாரின் பட விழாக்களைதான். எனக்கு தெரிந்து வேறு எந்த நடிகரின் பட வெற்றி விழாக்களையும் அவர்கள் ஒளிபரப்பியதாக தெரியவில்லை. (எந்திரன் தயாரிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த மாதமும் அதற்க்கு முந்தைய மாதமும் கூட அவர்கள் இதே போல நம் விழாவொன்றை ஒளிபரப்பினார்கள்). மேற்க்கண்ட சூப்பர் ஸ்டாரின் நிகழ்ச்சிகளின் பொது சன் மியூசிக்கின் TRP ரேட்டிங் நிச்சயம் கூடியிருக்கும்.

பிடுங்கு ரிமோட்டை...

இரண்டு நாட்களுக்கு முன்பு, சன் மியூசிக்கில் சந்திரமுகி படத்தின் 200 வது நாள் விழா ஒளிபரப்பப்பட்டது. நான் அப்போது வெளியே இருந்தேன். நம் நண்பர்கள் நிறைய பேர் எனக்கு இது குறித்து SMS அனுப்பினர். ஏற்கனவே பார்த்தது தானே என்று நான் உடனே வீட்டிற்கு செல்ல ஆர்வம் கட்டவில்லை. பணியெல்லாம் முடித்த பின்பு இரவு நான் வீட்டிற்கு திரும்பிய பின், டி.வி முன் உட்கார்ந்தேன். ஊரில் இருந்து வந்திருந்த எனது கஸின் ஒருவர் வேறு ஏதோ நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்தார். அவரிடமிருந்து அவசர அவசரமாக ரிமோட்டை பிடுங்கி சன் மியூசிக்கை ட்யூன் செய்தேன்.

பாதி முடிந்துவிட்டிருந்தது

நல்லவேளை நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. சூப்பர் ஸ்டார் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது உரை பாதி முடிந்துவிட்டிருந்தது. அதனால் என்ன, தேனில் ஊறிய பலாச்சுளை பாதிகிடைத்தால் என்ன சாப்பிடமாட்டோமா என்று அதை ரசிக்க ஆரம்பித்தேன்
.
நிகழ்ச்சியை எனது கஸினும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார். "என்னங்க நீங்க எனக்கு போன் பண்ணி சொல்லியிருக்ககூடாதா? நான் இதை பார்த்துக்கிட்டுருந்திருப்பேனே..." என்று என்னை கோபித்துக்கொண்டார்.

வீட்டுக்குள் இப்படி கை தட்டி விசில் அடிப்பவர்களை...

உரையை ரசித்துகொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் நான் பலமாக கையை தட்டி விசில் அடிக்க என்னை வித்தியாசமாக பார்த்தார். வீட்டுக்குள் இப்படி கை தட்டி விசில் அடிப்பவர்களை இப்போது தான் பார்க்கிறார் போல...

அடாடா. ... என்ன ஒரு உரை அது.... ச்சே.. முழு உரையை மிஸ் பண்ணிட்டோமே என்று ரொம்ப ஃபீல் செய்தேன்.... (எனக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர், போன் செய்த நண்பர்களும் இதையே தான் கூறினார். "என்ன சுந்தர் இது இப்படி பிச்சு உதர்ராறு தலைவர். இப்போ பார்த்தா கூட ப்ரோக்ரேமும் சார் ஸ்பீச்சும் ப்ரெஷ்ஷா இருக்கு. ச்சே... லேட்ட வந்ததுனால முழு ப்ரோக்ரேமும் பார்க்கமுடியல..." என்று அங்கலாய்த்தனர் .)

அனைத்து சூழ்நிலைகளுக்கும்...

சூப்பர் ஸ்டாரின் அந்த உரை ஏதோ நேற்று பேசியது போல உள்ளது.

"சோதனை வந்தாதான்யா சாதனை வரும்..."

"நல்லவங்க நிச்சயம் வாழ்வாங்க. என்ன... கொஞ்ச லெட் ஆகும் அவ்வளவுதான்"

"உங்களுக்கு நல்ல படத்தை கொடுக்கணும்னு தான் நான் ரொம்ப டயம் ஒவ்வொரு படத்துக்கும் எடுத்துக்குறேன்"

இப்படி அவர் கூறியது சமீபத்திய சோதனைகள், சர்ச்சைகள் மற்றும் இப்போது அவர் நடித்து வரும் எந்திரன் என அனைத்து சூழ்நிலைகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசிய பேச்சு அப்படியே பொருந்தியது பெரிய ஆச்சரியம் தான்.... முரண்பாடு என்பது துளியும் அவரது பேச்சில் இல்லை.

சில நடிகர்கள் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு சிறிய பத்திரிகை பேட்டியை கூட நம்மால் படிக்க முடியவில்லை. அந்தளவு முரண்பாடு, தம்பட்டம், புளுகு.... ஆனால் தங்க தலைவர்? 'கொடி பறக்குது' படத்தில் ஒரு வசனம் வரும். "இன்னிக்கி ஒரு பேச்சு... நாளைக்கு ஒரு பேச்சு இல்லே சார் நம்மகிட்டே. மூச்சிருக்கும் வரை ஒரே பேச்ச்சு... ஆமாமாம்!!" எவ்வளவு உண்மை..!!

[END]

சூப்பர் ஸ்டாரை போட்டி போட்டு படம் பிடித்த 50 க்கும் மேற்பட்ட போட்டோக்ராபர்கள் - Endhiran Update

*TRANSLATION (SUMMARY) AVAILABLE AT THE END OF THE ARTICLE

ந்திரன் ஷூட்டிங் வேலூர் வி.ஐ.டி. பலகலைக்கழகத்தில் ஜரூராக நடைபெற்று வருகிறது.

எடுக்கப்படும் காட்சிகள் குறித்த விபரங்கள அவ்வப்போது பத்திரிக்கைகள் மூலம் கிடைத்துவருகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி குறித்து, இன்றைய தினத் தந்தி வேலூர் பதிப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் எந்திரனை கண்டு பிடித்ததற்காக மீடியாவின் கேமிராமேங்களும் போட்டோக்ராபர்களும் அவரை Flash மழையில் படம் எடுத்து தள்ளுவதாக காட்சி எடுக்கப்பட்டது.

விரிவான செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள தந்தி கட்டிங்கை காண்க.

நீங்கள் கீழே காணும் செய்தி இன்றைய Indian Express நாளிதழில் வந்தது. ஆனா ஆள் அம்பு சேனை அனைத்தும் இருக்கும் நம்ம சிஃபி கும்பல் இந்த செய்தியை அப்படியே எடுத்து சுட்டு அவர்கள் வெப்சைட்டில் போட்டுவிட்டது.

கடைசியில் நான் ஆங்கிலத்தில் கொடுத்துள்ள Disclaimer ஐ படிக்க தவறாதீர்கள்.

…………………………………………………………………………………………………………………

ஐஸ்வர்யா ராய் - ரஜினி உயர் ரக காரில் ரொமான்ஸ்?

வேலூர் வி.ஐ.டி.யில் படு வேகமாக நடைபெற்று வருகிறது எந்திரன் படப்பிடிப்பு. இன்னும் சில நாட்களில் இந்த ஷெட்யூல் முடிவுற்று, அடுத்து குலு மணாலிக்கு செல்லவிருக்கிறது. அங்கு சில காட்சிகளும் ஒரு டூயட்டும் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

ரஜினி - ஐஸ்வர்யா ராய் இருவரும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய காட்சி ஒரு காஸ்ட்லி காரில் படமாக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்க்க்காகவே அந்த கார் ரூபாய் 90 லட்சம் செலவழிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

விஞ்ஞானியாகவும் ரோபோவாகவும் சூப்பர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடிப்பதால் மிகவும் பிசியான ஒரு ஷெட்யூலில் ரஜினி நடித்து வருகிறார். அதே போல ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளில் நடிக்கவேண்டியிருப்பதால் தனது உடலை பிட்டாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துக்கொள்ள கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

**கவனிக்க கார் விலையை எக்ஸ்பிரஸ் உறுதியாக கூறவில்லை. சும்மா பரபரப்புக்காக ஒரு பெரிய தொகையை போட்டிருக்கிறார்கள்.

…………………………………………………………………………………………………………………

Sify's news:

Rajini to romance in a car?

SHOOTING for Rajinikanth’s Endhiran, The Robot, is progressing at a brisk place and it is said that the crew is likely to move to Kulu Manali next for shooting a few scenes and a song for the film.

It is believed that an important scene feautring the two will be shot in a brand new high-end Benz car, purchased at Rs 90 lakh for this.

Meanwhile, the Superstar is also said to be working out with a rigourous schedule, to fit the role of a scientist and a robot (the actor plays two roles in the movie), and to also look slim andfit for his songs with Ash.

*The views expressed in the article are the Indian Express team's and not of Sify.com. We purely lift from other sources since we don't have our own.

…………………………………………………………………………………………………………………

English Translation:

Superstar soaked in camera flashes

Endiran shooting is progressing at a brisk pace in V.I.T. now. The details about the scenes which are being shot are appearing in local newspapers frequently.

In Dinathanthi’s Vellore edition they have published an article regarding a scene shot in V.I.T.

Rajini who invented a new ROBOT, has been interviewed by media persons and morethan 50 Photographers surrounding Rajini to catch glimpse of “The great Scientist”, So lightning of flashes continued for a while.

Also Indian Express - today’s edition has published an article regarding Endiran Shooting. But Sify people did a great job by just Cut & Copy (stolen) the same to their website.

Please read the Disclaimer above without fail.

- Translation by Hari Sivaji.

{END]

Sunday, December 28, 2008

சூப்பர் ஸ்டாருக்கு லிப்ட் கொடுத்த அந்த போக்குவரத்து காவலர் என்ன கூறுகிறார்?

சென்ற வாரம் எண்ணூர் படப்பிடிப்புக்கு சூப்பர் ஸ்டார் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொண்டதும் பின்னர் அந்த வழியாக சென்ற போக்குவரத் காவலரின் உதவியோடு அவர் செட்டுக்கு நேரத்துக்கு சென்றதும் தெரிந்ததே.

பார் போற்றும் சூப்பர் ஸ்டாரை பைக்கில் அழைத்து சென்ற அந்த காவலர் இது குறித்து என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாயிருப்பதாக நம் நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதோ அந்த அதிர்ஷ்டசாலி காவலரின் அனுபவம்.

இன்றைய தினமணியில் வெளியாகியுள்ளது இது. இந்த கட்டுரைக்கு தினமணி கொடுத்திருக்கும் முடிவுரையை பாருங்கள்....

தினமணி கூறுகிறது:

நேற்று வந்த 'அக்கடா துக்கடா' நடிகர், நடிகைகள் கூட இந்த காரில் தான் வருவேன், ஃப்ளைட்டில் பிஸ்னஸ் க்ளாசில்தான் பயணம் செய்வேன்; கேரவன் இருந்தால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உள்ளேயே வருவேன் என்றெல்லாம் அடம்பிடித்து தயாரிப்பாளர்களை வாட்டி எடுத்து வரும் இந்த காலகட்டத்தில், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது எனபதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குறித்த நேரத்தில் செல்ல ஒருவருடைய பைக்கில் செல்லக்கொடிய ரஜினியின் இந்த மனோபாவம் போற்றுதலுக்குரியது.

…………………………………………………………………………………………………………………
இதே சூழ்நிலையில் வேறு நடிகர்கள் இருந்திருந்தால்?

கீழ் கண்ட லிங்க்கை க்ளிக் செய்து அது குறித்த நமது பதிவை படியுங்கள்:

http://www.onlyrajini.com/?p=3490
…………………………………………………………………………………………………………………

[END]

Titbits 10: எந்திரனை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள், எல்லோரையும் வசியம் செய்யும் ரஜினி! Etc,etc.,

1) சூப்பர் ஸ்டாரை வரவேற்ற மீஞ்சூர் ரசிகர்கள்

சென்ற வாரம் எண்ணூரில் எந்திரன் படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடைபெற்றது நினைவிருக்கலாம். படப்பிடிப்பில் தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு சூப்பர் ஸ்டார் பைக்கில் சென்ற விஷயத்தை கேள்விப்பட்டோம்.

முதல் நாள் அவர் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பகுதி ரசிகர்கள் வல்லூர் கேம்ப் நுழைவாயிலில் அவரை வரவேற்று அட்டகாசமான பேனர் ஒன்றை அடுத்த நாளே வைத்துவிட்டனர்.

தமிழகத்தின் நாளைய தளபதியே வருக... வருக...!!

"எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழகத்தின் நாளைய தளபதியே வருக... வருக..." என்ற வாசகத்துடன் காணப்பட்ட அந்த பேனர் எந்திரன் படப்பிடிப்பு எண்ணூரில் நடக்கும் விஷயத்தை அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு செல்ல மக்கள் ஆயத்தமாகுமுன் அந்த குறிப்பிட்ட ஷெட்யூலே முடிந்து சூப்பர் ஸ்டார் வேலூர் சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டாரை நேரில் காண ஆவலாயிருந்த வல்லூர் மற்றும் மீஞ்சூர் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

2) எந்திரனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் வதந்திகள்

மெகா பட்ஜெட் படமாக இருந்தாலும் எந்திரன் படத்துக்காக ஷங்கர் எந்த அளவு Planning செய்கிறார் என்று சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா? இப்படி திட்டமிட்டு செயல்படும் ஷங்கர் குறித்து தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

ஷங்கர் படப்பிடிப்புக்காக மூன்று உயர் ரக கார்களை கேட்டதாகவும், அதில் ஒன்றை அவர் வேண்டுமென்றே அடித்து நொறுக்கும் காட்சியில் பயன்படுத்தியதாகவும் இது குறித்து ஐங்கரன் சொல்லாததையெல்லாம் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து கூறியிருந்தார் ஒரு ஆங்கில பத்திரிக்கையின் எழுத்தாளர் சில நாட்களுக்கு முன்பு. ஷங்கர் மூன்று கார்களை கேட்டது உண்மை. ஆனால் அது அவர் பயணம் செய்வதற்கு அல்ல. படத்தின் காட்சிகளில் பயன்படுத்த.

இப்போது அதே நாளிதழ் அந்த மூன்று கார்களையுமே (Mercedes Benz, BMW, Audi) ஷங்கர் அடித்து நொறுக்கப்படும் காட்சியில் பயன்படுத்திவிட்டதாக அபாண்டமாக கூறியுள்ளது. பொய் எப்படியெல்லாம் ரெக்கை கட்டி பறக்கிறது பார்த்தீர்களா? இப்படியெல்லாம் செய்திகளை வெளியிடுவதன் மூலம் சன்னை கலவரப்படுத்தும் அவர்கள் நோக்கம் நமக்கு தெரியாமலில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் இருக்க பயமேன் என்று ஹாயாக இருக்கிறது 'சன்'.

3) "நம் எல்லோரையும் வசியம் செய்கிறார் ரஜினி" - ஜாக்கி ஷராப்

அண்டை மாநில மற்றும் பாலிவுட் கலைஞர்கள் நம் சூப்பர் ஸ்டார் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் வியக்கத்தக்க ஒன்று என்று நமக்கு தெரியும். நானா படேகர் மற்றும் மணீஷ் மல்ஹோத்ராவையடுத்து நடிகர் ஜாக்கி ஷராப் சூப்பர் ஸ்டார் பற்றி மிகவும் உயர்வாக கூறியிருக்கிறார். பாலிவுட்டின் ஸ்டைலிஷ் நடிகர்களில் இவரும் ஒருவர். 'Best Dressed Actor' விருதை கூட இவர் ஒரு முறை பெற்றிருக்கிறார்.

'ஆரண்யகாண்டம்' என்ற தமிழ் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ள அவர் இங்கு Deccan Chronicle நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஒரு கேள்விக்கு சூப்பர் ஸ்டார் பற்றி அவர் கூறியிருக்கும் பதிலை பாருங்கள்.

உங்கள் குடும்பமே ரஜினி ரசிகர்களாக இருப்பது குறித்து...

ஜாக்கி ஷராப் : "நம் எல்லோரையும் ரஜினிகாந்த் வசியம் செய்கிறார் என்பதுதான் உண்மை. நானும் என் மனைவியும் மட்டுமல்ல என் மகன் டைகர் கூட அவரின் தீவிர விசிறி. நாங்கள் அவரது படங்கள் ஒன்றை கூட விடுவதில்லை"
…………………………………………………………………………………………………………………
On his entire family being a Rajinikanth fan...
Rajinikanth really mesmerises all of us. Not only my wife and I but my son Tiger is also a great fan of Rajinikanth. We never miss out his films. (Deccan Chronicle 27/12/08)
…………………………………………………………………………………………………………………

ரஜினியின் சம கால நடிகர் இவர். ஈகோ எதையும் பார்க்காமல் என் குடும்பமே ரஜினி தீவிர ரசிகர்கள் என்று கூறும் ஜாக்கி ஷராப்பின் பெருந்தன்மையை பாராட்டுவோம். நன்றி ஜாக்கி. தங்கள் ஆரண்யகாண்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

4) இதை படித்துவிட்டு சிரிக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு...!!!

அடுக்கு மொழி மன்னன் விஜய டி.ஆர். இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆ.வி. இதழில் சீரியஸ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். என் நண்பர் படித்து காண்பித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எனவே உங்கள் பார்வைக்கும் அந்த பேட்டியில் ஒரு பகுதியை வைக்கிறேன்.

"பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் சிம்பு மீது பொறாமை
"

"சிம்புவை சுற்றி ஏன் இத்தனை சர்ச்சைகள் என்று கேட்க்கிறார்கள். காய்ச்ச மரம் கல்லடி படத்தானே செய்யும். "இந்தப் பைய்யன் இப்படி வளர்றானேன்னு சிம்பு மேல பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஆதங்கம் இருக்கு. என் மகனைப் போல நல்லவனை இதுவரைக்கும் நான் பார்க்கலை. எவ்வளவோ பெண்கள் கூட பழகறதுக்கு வைப்பு கிடைச்சபோதும் காதல் குறித்து மென்மையான ஒரு இதயத்தோட இருக்கான் சார். சினிமாவுல இருந்துட்டு என்னை மாதிரியே நல்லவனா இருக்குறது பெரிய விஷயம். என் மகனை நினைச்சி நான் பெருமைபடுறேன்."

என் மகன் அடுத்த சூப்பர் ஸ்டாரா வர்றதுக்கு வாய்ப்பிருக்குதான்னு தானே கேக்குறீங்க? சினிமாவுல ஜெயிக்கிறதுக்கு புத்திசாலித்தனம், திறமை இருந்தா மட்டும் பத்தாது. பொறுமையும் அதிர்ஷ்டமும் கூட இருக்கணும். இவ்வளவு நடிகர்கள் இருக்கிற தமிழ் சினிமாவுல ரஜினி-கமல், விஜய்-அஜீத், தனுஷ்-சிம்பு ஆகிய ஆறு பேருக்கு மட்டும்தான் மக்கள் இடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒருத்தனா வந்து நிக்கிறான் யாரு? அவனைப் பெத்து இந்த விஜய டி.யாரு. "ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்" என்று 1989 லேயே நான் அவனுக்கு பாட்டெழுதிட்டேன் சார். எதிர்காலத்துல அவன் எப்படி வளர்ந்து வர்றான்னு பாருங்க சார். நான் தலைக்கனதொட சொல்லலை. தன்னம்பிக்கையோட சொல்றேன்."

என் அடுத்த படத்துல நான் ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன் ...

"என்னோட அடுத்த படத்தை இப்போ உள்ள யூத்துகளுக்காக எடுத்துகிட்டிருக்கேன். இதுல நான் ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக உடம்பை குறைக்க ஜிம் பொய் வெயிட்டை குறைச்சிக்கிட்ட்ருக்கேன். (வயிற்றில் வேகமாக அடிக்கிறாராம்) பாருங்க தொப்பைஎல்லாம் இல்லாம யூத் மாதிரியே இருக்கேனில்லை? இப்போ இருக்கிற ஹீரோக்களை என்னை மாதிரி ஆடி பாட சொல்லுங்க பார்க்கலாம்..."

ரஜினி, கமல் இவங்கல்லாம் ஹீரோவா நடிக்கும்போது நான் நடிக்கக்கூடாதா?

"வீராசாமியில நான் ஆடினா தியேட்டர்லே கைதட்டி ரசிக்கிறாங்க சார். உங்களை மாதிரி சிலர் தான் "ஏன் ஹீரோவா நடிக்கிரீங்கன்னு?" கேட்க்குறீங்க. ரஜினி கமலை விட நான் வயசுல சின்னவன் சார். அவங்க நடிக்கும்போது நான் நடிக்கக் கூடாதா? ஒரு காலை தூக்கி இப்படி அடிச்சேன்னா (பக்கவாட்டில் உதைக்கிறாராம்) நாள் முழுக்க அடிச்சிக்கிட்டே இருப்பேன்... நீங்க வேண்ணா கிண்டலுக்கு டி.ஆர். சிக்ஸ் பேக் வைக்கப்போரான்னு எழுதலாம். நான் முகத்தை காட்டி ஜெயிக்கிறவன் இல்லை. அகத்தை காட்டி ஜெயிக்கிறவன்."

ஆனந்த விகடனில் வரும் ஜோக்குகள் இப்போதெல்லாம் சிரிப்பை வரவழைப்பதில்லை என்று வாசகர்கள் குறைபட்டுக்கொள்வதால் இப்படி ஒரு முயற்சியில் விகடன் இறங்கியிருப்பதாக தகவல்.

இன்னொரு காமெடியும் இருக்கிறது. சமீபத்தில் இவரது மகன் நடித்து வெளிவந்துள்ள படத்தை குடும்பத்தினருடன் நிச்சயம் பார்க்கமுடியாது. இந்த லட்சணத்தில் படம் வெளியான் அடுத்த நாளே, சிஃபி கும்பல் அந்த படம் பெரிய வெற்றி என்று தீர்ப்பு கூறிவிட்டது. மேலும் அந்த வெப்சைட்டில் அந்த நடிகர் அளித்த பேட்டியில், "தம்பட்டம் படம் மிகப் பெரிய வெற்றி. என்னை மாஸ் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். வசூல் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது" என்று பேட்டியளித்திருந்தார். பேட்டியை படித்தவர்களுக்கு "கேள்வியும் நாங்களே, பதிலும் நாங்களே" என்று சிஃபி செயல்பட்டிருப்பது நன்கு புரிந்திருக்கும். (எப்படியிருந்த சிஃபி இப்படியாகிவிட்டது!!).

முதல் காமெடியைவிட இது பெரியதாக இல்லை?

Those who want Bonus Comedy pls watch this video. Pls pls watch this video. Monday madness will go. You will be releived from stress and a non-stop laughter guaranteed.









http://in.youtube.com/watch?v=583A2jqmnIw

[END]

இப்படியெல்லாம் பேச ரஜினிக்கு தெரியுமா?

நான் அரசியல் ரீதியாக கேப்டனை விமர்சனம் செய்யும்போது சிலர், "உன் தலைவனை முதலில் தெளிவாகப் பேசச் சொல், அப்பறம் நீ அடுத்தவனை விமர்சனம் பண்ணலாம்." என்று கூறுகின்றனர்.

நம் தலைவர் எப்போதும் தெளிவாக தான் பேசுகிறார். இதோ அவர்களது தலைவரின் தெளிவிற்கு மற்றொரு உதாரணம்.

ஷூட்டிங்குக்காக (?!!) காரைக்குடி வந்துள்ள விஜயகாந்த் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் அளித்த பதில் இருக்கிறதே... அப்பப்பா.... தெளிவான பேச்சு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துகொள்வீர்களா?

கேப்டன் : "மும்பை தாக்குதல் எதிர் பாராமல் நடந்தது போல், தேர்தல் நேரத்திலும் கூட்டணி என்பது எதிர்பாராமல் நடைபெறலாம். அதற்காக இப்போதிருந்தே வியூகங்கள் அமைத்துகொண்டிருக்கமுடியாது."

முழு காமெடிக்கு கடைசியில் தரப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பாருங்கள்.

அப்பப்பா என்ன ஒரு தெளிவான பேச்சு....!! (காரைக்குடியில் நல்ல தண்ணிக்கு பஞ்சமா நண்பர்களே?)

மும்பை தாக்குதல் போல இவர் கூட்டணி அமைப்பதும் மக்கள் மீதான தாக்குதல் தான் போல...எதை எதனுடன் ஒப்பிடுவது என்று கூட தெரியாத இவரெல்லாம் முதல்வர் பதவி வேட்பாளராம்... அதற்க்கு ஆதரவளிக்க ஊருக்கு நான்கு பேர். எல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி... அது சரி ஊரார் எல்லாரையும் கிண்டல் கேலி செய்துவரும் இவரது திரைமறைவு கொ.ப.செ. கோணி தனது "ஐயோ" பக்கங்களில் இதை குறிப்பிட்டு குட்டுவானா? அவன் ஏதோ நல்ல எழுத்தாளன் என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களுக்காக இதை கூறுகிறேன்!!)

இதையே ரஜினி கூறியிருந்தால் இந்த மீடியா என்னென்ன செய்திருக்கும்? கமெண்ட் பகுதியில் சந்திக்கிறேன்.

குறிப்பு: கேப்டன் தனது பதிலில் கூட்டணி குறித்து எங்களை யாரும் சீந்தவில்லை என்பதை எவ்வளவு நாசூக்காக கூறியிருக்கிறார் பாருங்கள்!

[END]

Saturday, December 27, 2008

கிராபிக்ஸ் (CG) மூலம் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட பிறகே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது - எந்திரன் ஆச்சரியங்கள்!!

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி திரைப்படம், விற்பனை முதல் வசூல் வரை பல சாதனைகளை படைத்தது. அதுமட்டுமின்றி டெக்னிக்கலாக பல விஷயங்கள் சிவாஜி படத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அதுபோல் தற்போது தயாரிப்பிலிருக்கும் எந்திரன் படம் சிவாஜியை விட பல மடங்கு ஆச்சரியங்களை உள்ளடக்கி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் எந்திரன் குறித்து கூறியிருப்பதை மட்டும் கீழே தருகிறேன். நேரத்தை சேமிக்கும் பொருட்டு படத்திற்கான Computer Graphics CG பணி உடனுக்குடன் சுடச் சுட தயாராகி வருகிறது என்று நாம் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்து உங்களுக்கு நினைவிருக்கலாம்.

"ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டும் என்று Computer Graphics மூலம் தீர்மானிக்கப்பட்ட பிறகே அது படம் பிடிக்கப்படுகிறது" - ரத்னவேலு

"எந்திரன் ஷங்கர் சாரின் லட்சியப் படம். நான் இதற்க்கு முன்பு ஒளிப்பதிவு செய்த சேது, வாரணம் ஆயிரம் போன்று உணர்வுப்பூர்வமாக இல்லாமல் எந்திரன் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். இது என் தனிச் சிறப்பு வாய்ந்தது என்று கூற பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக படப்பிடிப்பு முழுதும் முடிந்தவுடன் Computer Graphics CG பணி மேற்க்கொள்ளப்படும். ஆனால் என்திரனில் அது உடனக்குடன் செய்யப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே பல 'Pre-production' பணிகள் செய்துவிட்டோம். சொல்லப்போனால் படப்பிடிப்பை விட இதற்க்கு தான் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டோம். இதன் மூல பணத்தையும் நரத்தையும் நன்கு மிச்சப்படுத்தலாம். நாங்கள் இதுவரை ஒன்றிரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகளை தான் எடுத்திருக்கிறோம். தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டு என்று Computer Graphics மூலம் தீர்மானிக்கப்பட்ட பிறகே அது படம் பிடிக்கப்படுகிறது. CG யை பார்த்த பிறகு நிபுணர்கள் அந்த காட்சியை படம்பிடிக்க தேவையான வழிமுறைகள் மற்றும் அதற்க்கு தேவையான பட்ஜெட் குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எந்திரனை பொறுத்த வரை என் திறமையை காட்ட ஷங்கர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். எதையும் திட்டமிட்டே அவர் செய்கிறார். (Courtesy: Times of India)

…………………………………………………………………………………………………………………

உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்...

அதெப்படி CG மூலம் எடுக்க வேண்டிய காட்சிகளை தீர்மானிக்கிறார்கள்?

பொதுவாக அனிமேஷன் செய்பவர்கள் தாங்கள் எடுக்கவேண்டிய காட்சி குறித்து முதலில் Story Board வரைவார்கள். அதை அடிப்படையாக வைத்து அனிமேட் செய்வார்கள். நேரத்தை, மனித சக்தியை இதன் மூலம் பெருமளவு மிச்சப்படுத்தலாம். இதை தான் ரத்னவேலு கூறியிருக்கிறார்.
காஸ்ட் கண்ட்ரோலுக்கு (Cost Control) இது நிச்சயம் தேவை. அதுமட்டுமின்றி நாம் மனதில் நினைப்பதை கொண்டுவர இந்த Story Board மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை அனிமேஷனுக்கு மட்டும் தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. இது போன்ற Pre-production பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் எடுக்க வேண்டிய காட்சி என்னவென்று ஒரு ஐடியா முன்கூட்டியே கிடைத்துவிடுகிறது. ஆகையால் படச் சுருள் பயன்பாடு (Film Roll usage), படப்பிடிப்பு நேரம், ஷூட்டிங் செலவு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

…………………………………………………………………………………………………………………

[END]