Friday, May 28, 2010

நேற்றைய முதல்வர்; இன்றைய முதல்வர்; நாளைய முதல்வர் - ஆர்.எம்.வீ. இல்ல விழா சுவாரஸ்யம்!


நாளிதழ்களில் ஆர்.எம்.வீ. அவர்களின் இல்ல திருமண விழா பற்றி விளம்பரம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே யூகித்தேன், தலைவர் நிச்சயம் இதில் கலந்துகொள்வார் என்று. ஏன் கணிப்பு தவறவில்லை. ஏனெனில், ஆர்.எம்.வீ. அவர்கள் மீது சூப்பர் ஸ்டார் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அளவிடமுடியாதது. அவர் இல்ல திருமணம் என்றால் சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு இல்லாமல் இருக்குமா அல்லது சூப்பர் ஸ்டார் தான் கலந்துகொள்ளாது போய்விடுவாரா?

ஆர்.எம். வீரப்பன் மகன் தங்கராஜ் திருமணம் சென்னை ராஜா முத்தையா மகாலில் இன்று நடந்த போது ரஜினி பங்கேற்று பேசினார். என் மனதில் நீண்ட நாட்களாக உறுத்தி வந்த ஒரு விஷயத்தை பற்றி வெளிப்படையாக தலைவரே தனது மனதில் இருப்பதை கொட்டிவிட்டார்.


பாட்ஷா பட வெள்ளி விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி சூப்பர் ஸ்டார் கண்டிக்கப் போய், அது கடைசியில் எங்கு போய் முடிந்தது என்று உங்களுக்கே தெரியும். அந்த சுழலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தான் ஐயா ஆர்.எம்.வீ.

1996 - ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - தா.மா.கா கூட்டணி அமைத்து அது தேர்தலில் சூப்பர் ஸ்டாரின் மகத்தான ஆதரவுடன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று வாகை சூடியபோது, சூப்பர் ஸ்டாரின் பேச்சால் அ.தி.மு.க.விலிருந்தே நீக்கப்பட்ட ஆர்.எம்.வீ. அவர்கள் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. கிட்டத்தட்ட அனைவராலும் மறக்கப்பட்டார். தனது வழக்கப்படி, சீட் இல்லாதவர்களுக்கு இதயத்தில் தான் இடமுண்டு என்று கலைஞர் கூறிய சமயத்தில், அவர் கிட்டே பேசி ஒரு எம்.எல்.ஏ. தொகுதியாவது ஆர்.எம்.வீ. அய்யாவுக்கு தலைவர் வாங்கி தந்திருக்கலாம்.

இத்துனை புறக்கணிப்பிலும் சூப்பர் ஸ்டாருடன் ஆர்.எம்.வீ. வைத்திருந்த நல்லுறவு, ஆண்டுகள் கழிந்த போதும் பாதிக்கப்படவேயில்லை. அதற்க்கு பிறகு நடைபெற்ற சூப்பர் ஸ்டாரின் பல பட துவக்க விழாக்களுக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ஆர்.எம்.வி. அவர்கள் குறித்தும், பாட்ஷா படத்தின் பிரமாண்ட வெற்றி குறித்தும் மேற்படி திருமண நிகழ்ச்சியில் பேசியதாவது....

"ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்து இருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர்.
பாட்ஷா பட சர்ச்சையில் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்திக வாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்திக வாதியாக இருந்ததால் காலத்தின் கட்டாயம் என்றார்.


ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.
பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது.


பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் கலைஞரிடம் இப்போது இருக்கிறார்." இவ்வாறு ரஜினி பேசினார்.


விழாவில் சுவாரஸ்யம்: மேலே உள்ள புகைப்படத்தை சற்று பாருங்கள்.... தற்போதைய முதல்வர் கலைஞரும், அருகே நிற்கும் சூப்பர் ஸ்டாரும், பின்னணியில் (backdrop) முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களின் படமும், இடம் பெற்றுள்ள இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நேற்றைய முதல்வர்; இன்றைய முதல்வர்; நாளைய முதல்வர்!! சரி தானே? (தலைவருக்கு ராஜ களை இப்போவே வந்துடுச்சுப்பா!)

கீழே உள்ள படத்தை பாருங்களேன். முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் தலைவரிடம் ஏதோ பேசுவதை... இந்த ஸ்டில் இன்னும் டக்கர் தானே?


[Note: Site Maintenance work is almost completed. Soon we shall meet in our brand new home site Onlysuperstar.com]

Monday, May 24, 2010

கூட்டத்தில் இடறி விழுந்த ரசிகர்; ஓடிச் சென்று தூக்கிய தலைவர்!

டிகர் விஜய் வசந்த்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் வந்தபோது அவரை பார்க்க கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் அந்த நிகழ்ச்சியில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை என்றும் நமது முந்தைய பதிவில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த நிகழ்ச்சியில் நடந்த மற்றோர் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் இதோ.
(இன்றைய Times of India நாளிதழிலிருந்து...)

எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு சூப்பர் ஸ்டாருக்கு இத்துனை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் காரணமில்லாமல் இல்லை. அவரது அசத்தலான நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள் என்றாலும், அதையும் தாண்டி அவருக்குள் இருக்கும் அடக்கமான, எளிமையான, பிறருக்கு உதவும் எண்ணமுள்ள ஒரு மனிதனுக்கு தான் ரசிகர்கள் அதிகம். இந்த அவரது குணாதிசியம் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் வெளிப்பட்டது.

நடிகர் விஜய் வசந்த்தின் திருமண வரவேற்ப்பு நடந்த காமராஜர் அரங்கத்திற்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அவரை பார்க்க அலைமோதினர். பலர் அவருக்கு கைகொடுக்க முண்டியடித்தனர். கூட்டம் ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் போக, சூப்பர் ஸ்டார் மணமக்களுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு சூப்பர் ஸ்டார் திரும்பலானார்.

உடனே, மொத்த கூட்டமும் அவருக்கு பின் ஓடிச் செல்ல, இந்த சலசலப்பில் அவரை காண முற்பட்ட ஒரு ஊனமுற்ற ரசிகர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தவறி விழுந்துவிட்டார். விழுந்த வேகத்தில் அவரது ஊன்றுகோல்கள் சிறிது தூரம் தள்ளிப்போய் விழுந்தது. தனக்கு பின்னால் ஏதோ பரபரப்பு என்பதை உணர்ந்த சூப்பர் ஸ்டார் திரும்பிப் பார்க்க, உடனே ஓடிச்சென்று அவரை தூக்கி அவரது ஊன்றுகோல்களை தனது கையால் எடுத்துகொடுத்து, ஆறுதல் கூறினார். "இது போன்ற கூட்டம் மிகுந்த இடங்களில் பார்த்து கவனமாக வரவேண்டும்" என்று அவருக்கு புத்திமதி கூறினார். சூப்பர் ஸ்டாரை பின் தொடர்ந்து புகைப்படமெடுக்க சென்ற ஒரு போட்டோக்ராபர் இதை பார்த்துவிட உடனே இதை படமேடுத்துவிட்டார்.

கீழே விழுந்த அந்த ரசிகரோ, தான் விழுந்ததை பற்றி கூட பொருட்படுத்தாமல், "தலைவர் என்னை தொட்டுவிட்டார். நான் அவருடன் பேசிவிட்டேன். எனக்கு கீழே விழுந்ததனால் ஏற்பட்ட வலியை பற்றி கவலையில்லை. தலைவருடன், பேசியதே எனக்கு மகிழ்ச்சிதான்," என்றார்.

--------------------------------------------------------
Times of India (24/05/2010) English Transcript:

IMPRESSIVE AS EVER
K S PRAKAASH

It’s not without reason that superstar Rajini has such a huge fan following. The man, who is known for his style and acting skills, is also known for his altruistic nature. And it was this nature of his that was on display at a recent function.

When superstar Rajini walked in to wish Chennai-600028 actor Vijay at his wedding reception, he was greeted by a crowd that had gathered to catch a glimpse of him.And in the crowd was a differently abled person, who was equally intent on meeting the star. As people pulled and pushed at each other in their eagerness to meet the star, he lost his balance and fell.

Rajini, seeing the commotion, rushed to the rescue of the man. He helped him up and suggested that he be careful while in a crowd.

The man, who did not seem to care about the fact that he had fallen down, was heard saying, “Rajini sir touched me! I spoke to him! I don’t care about the pain. I’m happy I could talk to the superstar.”

--------------------------------------------------------

Thursday, May 20, 2010

நடிகர் விஜய் வசந்த் திருமண வரவேற்பு - சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்து - Excl. படங்கள் !!

நண்பர்களே....

நமது வெப்சைட் MAINTENANCE பணி காரணமாக கடந்த இரு வாரங்களாக, எந்த பதிவும் போட இயலவில்லை. இரு தினங்களில் முடியவேண்டிய பணி, இத்துனை நேரம் இழுக்கிறது. (எனக்கு இத்துனை காலம் இந்த பணிகளில் உதவியவர் மேற்படிப்புக்காக தற்போது அயல் நாடு சென்றுவிட்டபடியால், மாற்று ஏற்பாடு செய்ய தாமதமாகிவிட்டது.) தற்போது கோளாறுகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில், BY GOD'S GRACE நமது தளத்தில் எந்த வித தொய்வும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் நமது பழைய சர்வரை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் அது முடிவடையும். இந்த தருணங்களில் எந்த வித புதிய போஸ்ட்டையும் தளத்தில் போட இயலாது.

அதே சமயம் சூடான செய்திகளை, புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? எனவே, தற்காலிகமாக எனது ப்ளாக் அக்கவுன்ட்டை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.(Hmm...இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்..!)

Onlysuperstar.com தளம், முழுவதுமாக சரி செய்யப்படும் வரை இங்கு நாம் சந்திப்போம். உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிவியுங்கள்.

சிரமத்திற்கு வருந்துகிறேன்.

- சுந்தர்
Onlysuperstar.com

நடிகர் விஜய் வசந்த் திருமண வரவேற்பு - சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்து

'நாடோடிகள்' படங்களில் நடித்தவர் விஜய் வசந்த். இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த குமாரின் மகன். விஜய் வசந்துக்கும் சென்னையை சேர்ந்த நடராஜன்-சாந்தி தம்பதி மகள் நித்யாவுக்கும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று காலை திருமணம் நடந்தது.



மத்திய மந்திரி ஜி.கே. வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே. மணி, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்தினர். திருமண வரவேற்பு இன்று மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.



சூப்பர் ஸ்டார் அரங்கில் இருந்தது மொத்தம் ஐந்து நிமிடத்திற்கும் குறைவுதான். ஆனால் அவர் இருந்தபோது ஏற்பட்ட பரபரப்பு பிறகு அடங்குவதற்கு நேரம் பிடித்தது. சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை காண கூட்டம் முண்டியடிக்க, அங்கு கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. (இந்த புகைப்பங்களை பாருங்கள், மிகவும் கஷ்டப்பட்டு போட்டோக்ராபர் இதை எடுத்திருப்பது புரியும்.)

நிலைமையை புரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார், மணமக்களை வாழ்த்திவிட்டு மின்னலென கிளம்பி சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்திய இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள மணமக்களுக்கு தான் சற்று நேரம் பிடித்தது.

[END]