Tuesday, March 3, 2009

Superstar's speech welcomed with thunderous applause and shouts

As gueseed by us, Superstar took part on second day of Kannada film industry's Platinum Jubilee Celebrations Amrutha Mahotsava and delivered a riveting speech.

The legendary star no doubt was the cynosure of all eyes yesterday at the event. When the news broke out about the star's presence in the event, the fans went berserk and couldn't be controlled and it was a tough time for the police to manage them. One could here, whistles and claps and catcalls "thalaivaaaaa" spelt from the hear and soul.

Over to media reports on the same:

Deccan Herald's complete report on Superstar's speech

Times of India, Bangalore edition has given a fantastic report on the same with audience's arousing response for Superstar and his speech. Pls read between lines....

KEEP POLITICS OUT
Times News Network

Bangalore: “Please don’t divide us. We are living like brothers. Please don’t bring politics into cinema,’’ this was the fervent appeal by superstar Rajnikant.

His words were welcomed with thunderous applause and shouts by the crowd on Monday, the second day of the platinum jubilee celebrations of Kannada cinema. As many as 108 personalities from various segments of the industry were felicitated.

The amity and effervescence of personalities from the Kannada, Telugu and Tamil industries sent a collective message — art transcends boundaries, languages and cultures. Rajnikant, Dasari Narayana Rao, Jayaprada, Prakash Rai, Prabhudeva and Rama Naidu shared the dais with the Kannada film fraternity and spoke in one voice against politicization of cinema.

“Politics is like an ocean, while film industry is a pond. If the ocean can’t solve its problems, how can a small pond do it?’’ asked Rajnikant. On Sunday, Kamal Haasan had appealed to keep politics away from cinema.

One person was sorely missed during the celebrations: Rajkumar. Every speaker remembered and praised him, from Jayaprada to Prakash Raj to ministers Shobha Karandlaje and Katta Subramanya Naidu.

Rajnikant, who was present till the end of the three-hour programme, advised Kannada film-makers to make films based on novels and stories available in Kannada. “The industry has produced monumental films based on novels of writers like Ta Ra Su and Indira. There are so many great works by Kuvempu, Shivaram Karanth and Bendre. I don’t know why they are not being utilized. It makes me sad.’’

RAJNI’S WISH: The Tamil superstar expressed his desire to work in a Kannada film. “I want to act in Dalawayi Muddanna. It suits my character. I love that character. I don’t know when I will be able to do it. I don’t know when God wills,’’ said Rajnikant.

Rare photo tribute: An exhibition of over 3,000 rare Kannada film stills taken by K M Veeresh, at the Palace Grounds on Monday, marked the ‘Photo tribute’ to the 75th year of the Kannada film industry. Photos dating back to the first talkie Sati Sulochana to the latest Namyajmanru took the visitors to a different world.

Remembering the icons: To mark the platinum jubilee celebrations, 75 books were released on 75 late cinema icons, including Gubbi Veeranna, Subbaiah Naidu, B R Panthalu, R Nagendra Rao, Rajkumar and Balakrishna. Their family members were felicitated.

Monday, January 5, 2009

Titbits 11: "மக்கள் செல்வாக்குள்ள ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்!" - சிரஞ்சீவி, "ரஜினி ஒரு அபூர்வ மனிதர்" - லியாண்டர் பயஸ் Etc, etc.,

1) "ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்" - சிரஞ்சீவி

தமிழக எல்லைகளில் உள்ள ஆந்திர மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய சிரஞ்சீவி நேற்று விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சிரஞ்சீவி அரசியல் கட்சி நடத்தும் விதத்தில் எனக்கு நிறைய மாற்று கருத்துக்கள் உண்டு. அவர் குறித்த ஏமாற்றங்களும் உண்டு. அது ஒரு புறம் இருக்கட்டும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பகிரங்கமாக தனது விருப்பத்தை தெரிவிப்பவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர்.

தமிழகத்திலும் நம்மை போல நடிகர் ஒருவர் கட்சி துவங்கினால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைக்கலாம். (அப்ப ஏற்கனவே கட்சி துவக்கியுள்ள நடிகர்கள் ? அவர்களையெல்லாம் யார் கணக்கில் சேர்த்தது..!) மேலும் சூப்பர் ஸ்டார் அவரின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த சூழ்நிலையில் "தமிழகத்தில் ரஜினிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதை புரிந்துகொண்டு அவர் அரசியலுக்கு வரவேண்டும்." என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சிரஞ்சீவி.

2) "சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர்" - டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்

சூப்பர் ஸ்டாரைப் பற்றி இதோ மற்றுமொரு பிரபலத்தின் அட்டகாசமான கருத்து. இன்று வெளியாகியிருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பேட்டியளித்துள்ளார்.

நான் ரஜினியின் பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பல படங்கள் என் "All time favourites". நான் சிறு வயதில் அவரை நேரில் சந்திக்கும் அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர் என்று தான் நான் கருதுகிறேன்.

கவனிக்க கேள்வியாளர் கேட்டதென்னவோ, ஏதாவது தமிழ் படங்கள் பார்த்திருக்கிறீர்களா என்பது தான். ஆனால் அதற்க்கு அவர் கூறியிருக்கும் பதில் தான் நீங்கள் மேலே படித்தது. தமிழ் சினிமா என்றாலே ரஜினி தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருகிறார். இந்த நிலையில் அவரின் செல்வாக்கை அளக்கிறேன் என்று அவரை சிறுமைப்படுத்த முயலும் கைப்புள்ளைகளை என்னவென்று சொல்வது...?

(செய்தி உதவி: மணிகண்டன்)

3) புத்தாண்டை முன்னிட்டு ஸ்டார் தியேட்டரில் முத்து - தூள் கிளப்பிய நம் ரசிகர்கள்

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள திரையரங்கம் ஸ்டார். இங்கு பெரும்பாலும் இரண்டாம்கட்ட அல்லது மூன்றாம் கட்டமாக ரிலீசாகும்படங்கள் தான் திரையிடப்படும். சில சமயம் பழைய படங்கள் கூட திரையிடுவார்கள். நம் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்கள் இங்கு அடிக்கடி ரிலீசாகும்.

அப்படி நம் படங்கள் திரையிடப்படும்போது திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நம் ரசிகர்கள் பலர் தவறாது வந்து படங்களை கண்டுகளிப்பர்.

புத்தாண்டையொட்டி இங்கு சூப்பர் ஸ்டாரின் முத்து திரையிடப்பட்டது. 31 ஆம் தேதி இரவுக்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மொத்தம் சுமார் 250 - 300 பேர் இருந்தனர் அரங்கில். படம் ஆரம்பித்து தட்டில் கார்ட் போட்டதிலிருந்து இடைவேளை வரை நம் ரசிர்கள் பலர் ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் என திரையரங்கை அதகளப்படுத்திவிட்டனர்.

ஸ்க்ரீன் முன்பாக ஓயாமல் மெழுகுவர்த்தி, கற்பூரம் என்று கணக்கிலாமல் ஏற்றி வைத்து, "சூப்பர் ஸ்டார் வாழ்க" "தெய்வமே" "டாக்டர் ரஜினிகாந்த்" என்று கோஷம் போட்டுகொண்டேயிருந்தனர். ஒருவன் ஒருவன் முதலாளி, அம்ற்றும் தில்லானா பாடலின் போது கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் ஸ்க்ரீன் முன்பாக உற்சாக நடனமாடினர். முக்கிய வசனங்களின் போது விசில் சத்தம் பறந்தது.

சரியாக புத்தாண்டு பிறந்த நேரத்த்தில் அதாவது இரவு 12.01 க்கு ஜெயபாரதி சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் பற்றி "இந்த மண்ணுக்கு சொந்தக்காரனே அவன்தான்டா. இந்த மண்ணை ஆளவேண்டியவனே அவன்தான்டா." என்று கூறும் வசனம் தோன்றியது. தற்செயலாக இருந்தாலும் மொத்தத்தில் புத்தாண்டு கலக்கலாக பிறந்துள்ளது.

படத்தை அன்றிரவு அங்கு பார்த்த நம் நண்பர் ஒருவர் சொன்னது இது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் முத்து திரைப்படம் அடிக்கடி டி.வி.க்களில் ஒளிபரப்பான படம் என்பது தான். சமீபத்தில் கூட இப்படம் சன் டி.வி.யில் ஒளிபரப்பட்டது. அப்படி இருந்தும் மக்களை தியேட்டருக்கு இழுக்க சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே முடியும்.

4) திருமங்கலத்தில் தூள் பறக்கும் காமெடி காட்சிகள்

திருமங்கலத்தில் தினசரி காமெடி கலாட்டா தான். உபயம்: நம் கேப்டன். அவரின் உரையை கேட்டால் வயிறு குலுங்க சிரிக்கலாம். மன அழுத்தம், மன சோர்வு உள்ளிட்ட பல நோய்களுக்கு அது மாமருந்து. போதாகுறைக்கு அண்ணன் சுப்ரீம் ஸ்டார் வேறு களத்தில் உள்ளார். மக்களை கிச்சு கிச்சு மூட்டுவதில் இருவருக்கும் கடும்போட்டி நிலவுகிறது.

உதாரணத்துக்கு கேப்ப்டனும் சுப்ரீம் ஸ்டாரும் கூறிய சில டயலாக்குகளை படியுங்களேன். உங்களுக்கே புரியும்.

கேப்டன்: "பொதுமக்களுக்கு பணம் கொடுத்து எனது பிரசாரத்துக்கு வரவிடாமல் சில கட்சியினர் தடுக்கின்றனர். தே.மு.தி.க வேட்பாளர் தவறு செய்தால் கட்டி வைத்து உதைப்பேன். வாக்காளர்களுக்கு சில கட்சியினர் செல்போன் கொடுத்துவருகின்றனர். அப்படி கொடுத்தாலும் எனது வெற்றியை தடுக்க முடியாது. இந்த தேர்தலுக்கு கிட்டத்தட்ட நூறு கோடிவரை செலவழிக்கிறார்கள். எல்லாம் என் வெற்றியை தடுக்கத் தான். இங்கு ஒரு நடிகர் பிரசாரத்துக்கு வரப் போவதாக அறிந்தேன். (சரத் குமாரை மறைமுகமாக குறிப்பிட்டு). நடிகர்களை எல்லாம் நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் முன் நடிப்பார்கள்" என்று வீராவேசமாக பேச, "யோவ் அப்போ நீ யாருய்யா" என்று ஒருவர் சவுண்ட் விட, கேப்டன் உடனே கப்சிப்.

அதேபோல், வேறொரு கிராமத்தில் மக்களை பார்த்து, "நீங்கள் யாருக்கு ஒட்டுபோடுவீர்கள்?" என்று ஆவலாக கேட்க, "தி.மு.க.வுக்கு" என்று பாதி கூட்டமும், "அ.தி.மு.க.வுக்கு" என்று மீதி கூட்டமும் கோரசாக காத்த, நொந்தே போய்விட்டார் கேப்டன். (இது அவர் ஆதரவு நாளிதழிலேயே இன்று வந்துள்ள செய்தி!)

சரி அப்படின்னா, இவர் பிரசாரத்துக்கு எதுக்கு கூட்டம் வருதுன்னு கேக்குறீங்களா? அட எல்லாம் அவர் பண்ற காமெடியை ரசிக்கத்தான். இலவசமா காமெடி காட்சி கிடைச்சா நீங்க ரசிக்க மாட்டீங்களா என்ன?

பிரசாரத்துக்கு செல்கையில் தி.மு.க. வின் தேர்தல் அலுவலகம் ஒன்றை பார்த்து வண்டியை நிறுத்தி கேப்டன் சவுண்ட் விட, பதிலுக்கு அவர்கள் கற்களை தூக்க, கேப்டன் ஓட்டம் பிடித்தது தனிக்கதை.

ஒ.கே. அடுத்து சுப்ரீம் ஸ்டார் என்ன சொல்றாருன்னு பார்போம்.

சுப்ரீம் ஸ்டார்: (இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்).

எங்கள் இலக்கு பாராளுமன்ற தேர்தல் தான். இதற்காக வரும் ஜனவரி 21 தேதி முதல் ராதிகாவும் நானும் அடுத்தடுத்து சூறாவளி பிரச்சாரம் செய்யவிருக்கிறோம். மற்றவர்கள் பணம் கொடுப்பதை எதிர்க்கும் விஜயகாந்த் அவர் மட்டும் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கலாமா? இந்த தேர்தல் நியாயமாக நடந்தால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

சுப்ரீம் ஸ்டாரினி : (அதாங்க ராதிகா)

என் கணவருக்கு குடிகாரர் என்ற பெயர் கிடையாது. சட்டசபைக்கு சிலர் குடித்துவிட்டு வருவதுண்டு. இப்படியெல்லாம் நடக்குமா என்று என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.

எப்படி... போட்டி போட்டுகொண்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் அல்லவா?

இப்படி தினம் தினம் திருமங்கலத்தில் காமெடி திருவிழாதான்.

[END]

Sunday, January 4, 2009

ரஜினியின் செல்வாக்கை அளக்க கிளம்பியுள்ள கைப்புள்ளைகள்

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

ஜினியின் செல்வாக்கை நாங்கள் அளக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியுள்ள சில கைப்புள்ளைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

இளகின இரும்பைக் கண்டால் ஓங்கி அடிப்பான் கொல்லன் என்பது போல ரஜினி என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம்...யார் கேட்கப்போகிறார்கள் என்கின்ற நினைப்பு இவர்களுக்கு. (மற்ற நடிகர்கள் கதை அப்படியல்ல. ஏதாவது விழாக்களில் சம்பந்தப்பட்ட நிருபரை அந்த நடிகர்களின் தந்தைக்குலமோ அல்லது பி.ஆர்.ஒ. வோ பார்த்தால் வறுத்தெடுத்து விடுவார்கள். இதற்க்கு பயந்தே இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.)

கஞ்சன் வைத்த எச்சில் இலை விருந்து கதையாக கஞ்சனைப் பற்றி கவலைப்படாத சிலர் மட்டும் சென்று வந்த (ஏமாந்த) அந்த விருந்து ஊரிலயே பெரிய விருந்தாம். அது போல இருக்கிறது இவர்கள் வாக்கெடுப்பு நடத்தி ரஜினியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக அங்கலாய்த்து கொள்வது.

"இது ஒரு குப்பைத் தொட்டி!" என்று பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே புறக்கணித்த, குறிப்பாக ரஜினி ரசிகர்கள் முற்றிலும் புறக்கணித்த அந்த வலைத்தளம் உலகத் தமிழர்களிடம் (??!!) வாக்கெடுப்பு நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளதாம். அதன் படி ரஜினி கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் இடத்திலிருக்கிறாராம். இதெப்படி இருக்கு?

"நாங்கள் ஒரு குண்டு சட்டி. இந்த குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வருபவர்களை வைத்து எங்கள் வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கிறோம்!" என்று அந்த தளம் ஒரு முன்னுரை கொடுத்துவிட்டு முடிவுகளை அறிவித்தால் நன்றாக இருக்கும்.

ஜஸ்ட் ஒரு ஆவரேஜ் வெற்றிப் படம் கொடுக்க கூட துப்பு இல்லாத நடிகர்கள் எல்லாம் அந்த வாக்கெடுப்பில் பெற்றிருக்கும் வாக்குகள் இருக்கிறதே.... அட போங்கப்பா.... அது இன்னும் பெரிய காமெடி.

………………………………………………………………………………………………………………

*This post is an outcome due to the anguish of one of our fan who told me about this.

Tom, Dick and Harry: "We are ready to gauge Rajini's fame!!"

When the whole Tamil speaking population of the globe is aware of the international acclaim of Superstar, it is really funny to see some jobless Tom, Dick and Harrys' attempts to gauge his fame by mere website voting.

"When the cat's away the mice will play". So as Superstar's tolerance to such things gives room for these crap sites to blabber like this. But this is not the case in writing about other actors. Concerned actor's papa or PRO will blast the particular writer or reporter if he is spotted in any event. So they won't dare to write like this about other actors.

The concerned Tamil website has been stamped as DUSTBIN and ignored by the common people particularly by Rajini fans long back itself and nobody cares to visit that site. But the website claims that it conducted the polls among Tamilians (??!!) all over the world and have published the results. It has expressed its concern that Superstar Rajini is trailing in the third place for the past three years. How is it? ha...ha...ha...!

It is rib-tickling to note the huge votes garnered by some actors in that poll, who are struggling to give even an average hit movie for years. Note: For years!!

………………………………………………………………………………………………………………

[END]

ரஜினியின் அறிவிப்பால் நாச்சிக்குப்பம் பெற்றுள்ள திடீர் அந்தஸ்து; மனைகளின் விலை கடும் உயர்வு!!

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

Friends, I have provided the complete translation of the article at the end. - Sundar

………………………………………………………………………………………………………………

ரு சாதரண கல்லின் மீது தலைவர் கைவைத்தால் கூட அது விலை மதிக்கமுடியாத மாணிக்க கல்லாகிவிடும். அப்படியிருக்க ஒரு ஊரை குறிப்பிட்டு "இது தான் என் பூர்வீக இடம். என் பெற்றோருக்கு இங்கு நினைவிடம் எழுப்ப ஆசைப்படுகிறேன்" என்று சொன்னால்........?

நாச்சிக்குப்பம் பெற்றுள்ள திடீர் அந்தஸ்து

நேற்று வரை ஒரு சாதரண சிற்றூராக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்த நாச்சிக்குப்பம், சூப்பர் ஸ்டாரின் பூர்வீக கிராமம் என்று தெரிந்த பின்னர் ஓவர் நைட்டில் ஒரு VVIP அந்தஸ்தை பெற்றுவிட்டது. அதுவும் அவர் அங்கு தன் பெற்றோருக்கு நினைவு மண்டபம் அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டவுடன் கிட்டத்தட்ட ஒரு சுற்றுலாத் தலமாகிவிட்டது.

கேட்பாரற்று கிடக்கும் இடத்தையே பிளாட் போட்டு பெரிய விலைக்கு விற்றுவிடும் நம்ம ரியல் எஸ்டேட்காரர்கள் நாச்சிக்குப்பம் பற்றி சூப்பர் ஸ்டார் கூறியவுடன் சும்மா இருப்பார்களா? அந்த இடத்தில் தற்போது காலியிடங்களின் விலை தாறுமாறாக எகிறிவருகிறது. மனைகளின் விலை மட்டுமின்றி நாச்சிக்குப்பத்தில் சொத்துக்களின் மதிப்பும் கடுமையாக உயர்ந்துவருகிறது. நாச்சிக்குப்பத்திற்கு கிடைத்துள்ள இந்த திடீர் நட்சத்திர அந்தஸ்தால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காடிவருகின்றனர். ஒரு ஏக்கர் தற்போது நாசிக்குப்பத்தில் 40 லட்சத்துக்கு விலைபோகிறது. வருங்காலத்தில் இது மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும்!!

இன்றைய தினமலர் இது குறித்து இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் அண்ணன் சத்யநாராயணா ராவ் இங்கு வந்ததாகவும் அங்கு அவர்கள் குடியிருந்த வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பார்வையிட்டதாகவும் பின்னர் அந்த ஊர் கோவிலுக்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் தூரத்து உறவினர்கள் சிலர், சத்யநாராயணா ராவுடன் பேசியதாகவும், கடந்த கால நினைவுகளை அவருடன் அசைபோட்டதாகவும் தெரிகிறது.

தற்போது மார்கழி மாதம் நடைபெற்றுவருகிறது. தை மாதம் பிறந்தவுடன் (தை பிறந்தால் வழி பிறக்கும்!!) இது குறித்த பணிகள் துவங்கப்படும் என்று அங்கு ரசிகர்களிடம் சத்யநாராயணா உறுதி தெரிவித்திருக்கிறார்.

சென்னை மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த பல ரியல் எஸ்டேட் முதலாளிகள் தினசரி நாச்சிக்குப்பத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அங்கு சுற்று வட்டாரத்தில் இடங்களை வாங்கி குவிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரைப் போல எதிர்காலத்தில் நாச்சிக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி தொழில்வளம் சார்ந்த ஒரு பெரிய மையமாக மாறும் என்பது உறுதியாகிவிட்டது.

சும்மாவா பின்னே? தமிழகத்தை வருங்காலத்தில் செதுக்கப்போகும் சிற்பி ஒருவரின் பூர்வீக ஊராயிற்றே....

………………………………………………………………………………………………………………

Translation

The Man of Midas touch Rajini, converts the tiny village into a gold mine

Nachikuppam gains VVIP status

We all know that Superstar is a Man of Midas touch. Just imagine what would happen to a small village like Nachikuppam when he says, "It's my ancestral home place. I would like to raise a Memorial to my parents there..!!"

The village which is less known to the outsiders till previous night gained international fame when Superstar said that it is his ancestral place in his fans' meet. The tiny village suddenly wore a VVIP status. And it has turned more or less a tourist spot after his announcement of to-be built memorial there.

Will our real estate giants who sell even an useless land at unimaginable price stay cool after this? The price of vacant lands in and around Nachikuppam is shooting up to exorbitant prices. Not only lands the property value including newly constructed houses and old houses also has shot up. The residents of Nachikuppam are in euphoric mood because of this. Presently a single is acre is costing near Rs.40 lakhs there. It is expected that the price will shoot up in forthcoming days.

Today's Dinamalar has comeup with a news regarding this. It is said that Superstar's brother Mr.Sathyanarayana Rao came to the small town last 27th and visited various places including their ancestral home and street. He also had a chat with their distant relatives who were dwelling there for decades. Later Mr.Sathyanarayana Rao paid visit to the local temple. Before starting he has assured to local fan club members that the process for memorial construction and land acquisition would start in coming Thai month. (Jan 15th).

The real estate brokers in and around Chennai and Krishnagiri are thronging to Nachikuppam daily and buying the lands in large spree. Like Sriperumbudur it is expected that Nachikuppam would turn into industrial and wealth hub in future.

Why not? Isn't the ancestral place of a sculptor who is going to sculpt modern Tamil Nadu....?

………………………………………………………………………………………………………………

[END]

Sceintist Rajini and Medico Aiswarya Rai - Endhiran Update

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

சயன்டிஸ்ட் ரஜினி, மருத்துவ மாணவி ஐஸ்வர்யா ராய் - Endhiran Update

சும்மா வேலூரையே அதகளப்படுத்தி விட்டார்கள் நம் ரசிகர்கள். இப்படி ஒரு கூட்டத்தை வேலூரில் ஷங்கர் எதிர் பார்க்கவில்லை. விடுமுறை காலத்தில் படப்பிடிப்பை நடத்தியதற்கே இப்படியென்றால் வேலை நாட்களில் நடத்தியிருந்தால்?

VIT யில் படப்பிடிப்பை பார்க்க நேர்ந்தவர்கள் கூறும் அனுபவம் வித்தியாசமானது. எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்த விபரத்தை நான் வெளியிட விரும்பவில்லை. இருப்பினும் ஒரு சிறிய அவுட்லைன். ஷூட்டிங் பார்த்தவர்களிடம் நமது நண்பர்கள் பேசி, பிறகும் நம்மிடம் அதை தெரிவித்தனர். ஸோ, just enjoy and forget. உண்மை விபரங்கள் சற்று முன்னர் பின்னர் இருக்கலாம்.

ஐஸ்வர்யாவிடம் ரஜினி கோரிக்கை

மிகவும் திறமைசாலியான, படிப்பில் படு சுட்டியான மருத்துவக் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ராய். அவர் தனது ஆராய்ச்சியில் உதவியாளராக சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் விஞ்ஞானி ரஜினி, அவரிடம் சென்று அதற்கான கோரிக்கையை வைப்பது போலவும் அதற்க்கு ஐஸ்வர்யா ராய் மறுத்து பிகு செய்வது போலவும் (சும்மா லுல்லுலுவாய்க்கு தான்) காட்சிகள் எடுக்கப்பட்டன. பார்ப்பதற்கு படு ஸ்லிம்மாக உண்மையில் ஒரு மருத்துவ மாணவி போலவே ஐஸ்வர்யா ராய் காட்சியளித்தார். அதற்கேற்றார்போல அவர் கழுத்தில் காலேஜ் ஐ.டி. கார்ட், கையில் ஒரு ஸ்டெதஸ்கோப், வெள்ளை நிற கோட் என்று சகலமும் பர்ஃபெக்டாக காணப்பட்டது.

எத்தனை வேடம் மொத்தத்தில்?

தொடர்ந்து சில நாட்கள் படப்பிடிப்பை பார்த்தவர்கள் சற்று குழம்பித்தான் போனார்கள். ரஜினிக்கு இதில் எத்தனை வேடம் தான் என்று. காரணம் ஒரு நாள் French Beard உடன் படு ஸ்டைலாக முழுக்கை சட்டை ஜீன்ஸில் காணப்பட்ட ரஜினி அடுத்த நாள் மீசையின்றி கருநீலம் மற்றும் கருப்பு பேன்ட் அதற்க்கு தோதான கூலிங் க்ளாஸ் என்று ஸ்டைலிஷாக காணப்பட்டார். (அநேகமாக இது ரோபோவாக இருக்க கூடும்).

சுற்றுலாத் தலமாக மாறிய VIT

படப்பிடிப்பை தூரத்திலிருந்து பார்த்த ரசிகர்கள் ரஜினியின் உடை அதன் நிறம், அவரின் கெட்டப், சின்ன சின்ன மேனரிசம் என்று ஒன்று விடாமல் தங்களால் முடிந்ததை பார்த்து அதை நண்பர்களுக்கு சொல்லி சொல்லி மகிழ்கிறார்கள். பொற்கோவில் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா மற்றும் வழிப்பாட்டு தளங்களுக்கு கேப்கள் மற்றும் பஸ்களில் வருபவர்கள் (குறிப்பாக சபரிமலை சென்று திரும்புபவர்கள்) எந்திரன் ஷூட்டிங் பற்றி கேள்விப்பட்டதும் VIT க்கு வண்டியை திருப்பிவிடுகின்றனர். இதனால் VIT மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் கடந்த வாரம் நல்ல பிசினஸ். (வேலூர் நண்பர்கள் கூறியது!)

படப்பிடிப்பு வளாகத்தில் கேமிரா மற்றும் கேமிரா செல்போன்கள் அனுமதிக்கப்படாததால் புகைப்படம் எடுக்க நினைத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு சிலர் மட்டும் தொலைவிலிருந்தே தங்கள் உயர் ரக கேமிராவில் ZOOM செய்து படமெடுத்தனர். "எந்திரன் ஒரு தந்திரன், ரஜினி அவ்ளோ தான்" என்றெல்லாம் கவர் ஸ்டோரி எழுதித்தீர்த்த பத்திரிகை ஒன்று கவரேஜுக்காக தனது டீமையே ஸ்பெஷலாக அனுப்பியிருந்தது தான் உச்சகட்ட காமெடி.

தற்போது எந்திரன் கேம்ப் சென்னைக்கு மாறியாகிவிட்டது. விரைவில் பாடல் காட்சிக்காக குலுமனாலி கிளம்பவிருக்கிறது ஒட்டுமொத்த டீமும்.

………………………………………………………………………………………………………………

English Translation

Scientist Rajini & Medico Aishwarya Rai

Endhiran's Vellore schedule has already get completed and the crew has moved to Chennai last weekend. Our fans created a lot of fret and frenzy at VIT and its surroundings. Shankar didn't expect such a restless crowd even during holidays.

It was a unique experience for those who had the luck to have a glimpse of the shooting. I don't want to reveal the details. However i give a small outline straight away from those who watched the shoot. (through my Vellore friends).

Rajini's appeal to Aishwarya Rai

Aiswarya Rai is a meritorious medical student who always looks forward for challenging opportunities. The great and nationally acclaimed scientist Rajini wants to keep her as an assistant for his new vital project on Robotics. So, he goes to the National Research Centre & Medical college to meet her and persuade for this. But she acts pricey for that. Aiswarya Rai was looking like a perfect medico with stethescope & college uniform in her arms with college ID card hanging around her neck.

How many roles for Superstar?

Those watched the shoot continously for a few days get cofused regarding the number of roles that Superstar is acting in. Because one day he was spotted with Neat full shirt with jeans in a french beard (Scientist). The next day without moustache in a dark shirt and matching pants aka Aiyyampettai Arivudai Nambi Kaliyaperumal Chandran as in Thillu Mullu. (Probably this must be the Robot).

Fans keen watching the details

Fans who were watching the shooting from the distance didn't fail to notice even a minute mannersim of Superstar, details of his outfit and his makeup. Instantly they were seen relaying the same to their near and dearones. Pilgrimages and touristers who were heading for or returning from Golden Temple, adjacent tourist and religious spots were seen redirecting their vans and cabs to the shooting spot. Particularly those who were returing from Sabarimala. Due to this, restaurants and refreshment stalls had a sound business last week. (As told by our Vellore friends)

Camera phones or Digital cameras were not allowed inside the shooting spot and so it was very hard job to take snaps. A few who possessed hi-end cameras had luck to take snaps from quite distance with ZOOM operation. Others could simply stare at them. What the highlight was a magazine group which indulged continously in defaming Superstar sent a special team to VIT to cover the shooting news.

The Endhiran crew which is in Chennai may kick off to Kullu Manali anytime to shoot a song sequence.

………………………………………………………………………………………………………………

[END]


உலக சரித்திரத்தின் அடுத்த அத்தியாயமே...

ந்த பிறந்த நாளுக்கு நம் ரசிகர்கள் நலத் திட்ட பணிகள் பலவற்றை செய்து அசத்தியதோ டல்லாமல் , வழக்கமாக வைக்கும் பேனர்கள், எழுப்பும் போஸ்டர்கள் ஆகியவற்றையும் வித்தியாசமாக செய்து அசத்தி விட்டார்கள்.

அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது சின்மயா நகரில் நான் பார்த்த ஒரு பேனர். "உலக சரித்திரத்தின் அடுத்த அத்தியாயமே...." என்று சூப்பர் ஸ்டாரை அழைத்த அந்த பேனர் என்னை மிகவும் கவர்ந்தது. முதலில் பைக்கில் அந்த இடத்தை வேகமாக கடந்து சென்று விட்டேன். அட, அந்த பேனர் ஏதோ வரைபடம் (MAP) போட்டு வித்தியாசமாக இருக்கிறதே என்று திரும்பி வந்து பார்த்தால், வாவ் அசந்து விட்டேன்.

உலக நாடுகள் பலவற்றை மார்க் செய்து அந்தந்த நாட்டில் தோன்றிய தலைவர்கள் பெயரை ஹைலைட் செய்து, இந்தியாவுக்கு வாழ்ந்த மஹாத்மாவையும் தற்போது வாழும் மஹாத்மாவையும் ஹைலைட் செய்திருந்தனர். (அந்த ஐடியாவை கேப்டன் ரசிகர்கள் இனி Copy & Paste தான்!!).

இந்த கணக்கு எப்படி?

எந்திரனின் உலகளாவிய ரிலீஸ், பாபா படத்தில் ஜோதிடர் விஜயகுமார் கூறும் வாக்கு, எதைச்சையாக இந்த ரசிகர்கள் எழுப்பியுள்ள பேனர் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்...!! நல்ல திட்டங்களை வகுக்க, செழுமையை பெருக்க, தீமைகளை கழிக்க, அரசியல் அராஜகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க, ஒரு தலைவன் உலக அளவில் தயாராகிக்கொண்டிருக்கிறான் என்பது புரியும்.

(Double click the image to ZOOM bigger)

என்ன ஒரு பிரமாதமான யோசனை... பேனர் எழுப்பிய அந்த ரசிகர்களை பாராட்டுகிறேன். ஒரே போக்கில் சிந்திக்காமல் தமது சிந்தனையை அகலப்படுத்திய அந்த ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பக்க வாட்டில் உள்ள பேனரில், "இந்தியாவின் இயந்திரனே..." என்னும் வாசகத்தையும் அதற்க்கு கீழே "மலரினும் மெல்லிய மனம் படைத்த மன்னனுக்கு..." என்ற வாசகத்தையும் காணத்தவறாதீர்கள்.

பேனரை பெரிதாக பார்க்க டபுள் க்ளிக் செய்யவும். ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் தகவலும் நன்கு தெரியும்.

………………………………………………………………………………………………………………

நீங்களும் இது போன்ற படங்கள் அனுப்பலாம்

ரசிகர்கள் தங்கள் ஊரில் இது போன்று பேனர்கள் போஸ்டர்கள் ஏதாவது கண்டால் அதை படமெடுத்து அனுப்பலாம். இங்கு தக்க முன்னுரையுடன் பிரசுரிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:
simplesundar@gmail.com

………………………………………………………………………………………………………………

[END]