Tuesday, December 9, 2008

சமூக நலப் பணிகளுடன் ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள்

லங்கையில் தமிழ் சகோதரர்கள் படும் துயரத்தை மனதில் கொண்டு, தமது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும், அதற்க்கு பதில் மக்களுக்கு பயன் தரக்கூடிய சமூக நலப் பணிகளில் ஈடுப்படும்படியும் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களை கேட்டுக்கொண்டது தெரிந்ததே.

இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் ரத்த தான முகாம், கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர். இதை தவிர ரசிகர்கள் ஆலயங்களில் உலக அமைதிக்காக வரும் (12/12/2008) சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று விஷேஷ வழிபாடுகளும், தத்தமது பகுதிகள் அன்ன தானமும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மேற்படி ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் செய்யும் இத்தகு சமூக நல செயல்களை உங்கள் பார்வைக்கு வைக்க நமது தளம் முயற்சிக்கும்.

நன்றி,

- சுந்தர்
for Onlyrajini.com

…………………………………………………………………………………………………………………

இலவச கண் சிகிச்சை சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லை ரஜினிகாந்த் ரத்ததான இயக்கம கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் கண்டரியும் முகாம் நடத்தியது. பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனைடந்தனர்.

நெல்லை ரஜினிகாந்த் ரத்ததான இயக்கம், திருநெல்வேலி சிட்டி & டவர் லயன்ஸ் கிளப், லிப்ட் பவுண்டேஷன் அமைப்புகள் இணைந்து பாளையங்கோட்டை பர்க்கிட் மாநகரில் இலவச கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் கண்டரியும் முகாம் நடத்தியது.

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழு மருத்துவர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.. 11 நபர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 4 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த முகாமிற்கு திருநெல்வேலி டவர் லயன்ஸ் கிளப் தலைவர் Ln. S. கஜேந்திரபாபு தலைமை தாங்கினார். சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் Ln. M. ஜெயமணி வரவேற்று பேசினார். லிப்ட் பவுண்டேஷன் நிறுவனர் ஜேமல்ஸ் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் Ln. S.V. ஜானகிராம் அந்தோணி, மனித உரிமைகள் கழக தலைவர் திருமலை முருகன், சிட்டி லயன்ஸ் கிளப் செயலர் கதிரேசன், டவர் லயன்ஸ் கிளப் செயலர் சுதந்திர லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை மனித உரிமைகள் கழக மனில புரவலர் செய்யது நவாஸ் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். சிட்டி லயன்ஸ் கிளப் ராஜன், டவர் லயன்ஸ் கிளப் ரிச்சர்டு ராஜ ரத்தினம், மாணவரணி ரஜினி மன்ற கண்ணன், மனித கடவுள் ரஜினி முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஆசிரியர் ஆவுடையப்பன் நன்றி கூறினார்.

இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லிப்ட் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் Ln. T.F. ஜோசப், நெல்லை ரஜினிகாந்த் ரத்த தான இயக்க நிர்வாகி S.A. சிகாமணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி Rajinifans.com நடத்தும் ரத்த தான முகாம்

சமூக நலப் பணிகளில் முன்னோடியாக திகழும் Rajinifans.com சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் நடுத்துகிறது.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி Rajinifans.com ரத்த தான முகாம் நடுத்துகிறது. இந்த முகாம் முழுக்க முழுக்க www.rajinifans.com தனது சொந்த முயற்சியில் நடத்துவது. இதற்காக எந்த வித நிதியுதவியும் யாரிடமும் பெறப்படவில்லை என்பதை அது தெரிவித்துகொள்கிறது.

வருகிற டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

முகவரி: சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள மவுண்ட் மெடிக்கல் சென்டரில் (முகவரி: 5/66, பட் ரோடு சந்திப்பு, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-18).

இந்த முகாமுக்கு டாக்டர் எம்.சச்சிதானந்தன், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முகாமுக்காக Rajinifans.com வடிவமைத்துள்ள பேனர்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.

உயரிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் ரத்த தானம் நடைபெற மருத்துவர் குழு ஏற்பாடு செய்துள்ளது.

தலைவர் பிறந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் www.rajinifans.com முயற்சியில் நீங்களும் கரம் கோர்க்கலாமே…

மேலும் விவரங்களுக்கு:
http://www.rajinifans.com/others/contactus.php

ராம்கி : 9444453694
கோபி: 9894936203
கலிஃபுல்லா: 9443288198
அருள்: 9791892290
கணேஷ்: 9994739007
சந்தோஷ்: 9841752821

[END]