Thursday, December 4, 2008

ரஜினி ஏன் நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்லவில்லை?

'ரஜினி பேரக் கேட்டாலே' நூலின் பிரதியை சூப்பர் ஸ்டாரிடம் நேரில் அளித்து வாழ்த்து பெறுவதற்காக திரு.எஸ்.பி.முத்துராமனுடன் நூலை எழுதிய டாக்டர் காயத்ரி மற்றும் அவரது கணவர் திரு.ஸ்ரீகாந்த் ஆகியோர் சூப்பர் ஸ்டாரை காண ராகவேந்தரா மண்டபம் சென்றிருந்தனர்.

சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் தோற்றம்

எந்திரன் படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் இப்போது எத்தகைய தோற்றத்தில் இருப்பார் என்று அறிந்து கொள்ளும் என்னும் ஆவல் எனக்கு எழுந்தது. இந்த புகைப்படத்தின் மூலம் அதற்க்கு விடை கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எத்தகைய தோற்றத்தில் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் வசீகரித்துவிடுவார் என்பதற்கு இது சாட்சி.

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் என் போகவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். இதற்க்கு மட்டுமல்ல ஆங்கில நூல் வெளியீட்டு விழாவிற்கு கூட அவர் செல்லவில்லை.

காரணம், அவர் சென்றால் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து நூலை எழுதிய டாக்டர் காயத்ரிக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் போகலாம். அதுமட்டுமின்றி, தன்னை பற்றிய புகழுரைகளை தானே அமர்ந்து கேட்பதை ரஜினி எப்போதும் விரும்புவதில்லை. அந்த விழாவிற்கு அவர் வந்திருந்தால், வந்திருந்த அனைவரும் ரஜினியை புகழ்ந்து அவரது கவனத்தை ஈர்ப்பதிலேயே தங்கள் உரையை பயன்படுத்தியிருப்பார்கள். அதை தவிர்க்கவே அவர் செல்லவில்லை.

தவிர, இதற்க்கு முன்பு கூட ரஜினியை பற்றிய நூல் ஒன்றை காலம் சென்ற ஜி.கே. மூப்பனார் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். அதற்க்கு கூட ரஜினி செல்லவில்லை. தனக்கு தானே புகழ் மாலை சூட அவர் என்றும் விரும்புவதில்லை என்பதற்கு இதுவே சான்று.

இதுவே சூப்பர் ஸ்டாருக்கு பதில் வேறொரு நடிகராக இருந்திருந்தால், தமக்கு தாமே பட்டங்கள் சூட்டிக்கொள்ளும் தலைவர்களைப் போல பல நகைச்சுவை காட்சிகளை இத்தகு வெளியீட்டு விழாவில் அரங்கேற்றியிருப்பர்.

குறிப்பு: பின்னணியில் இருக்கும் ராகவேந்திரர் படத்தை கவனித்தீர்களா? தங்களுக்காக க்ளோசப் ஷாட்டில். (வேறொரு சந்தர்ப்பத்தில் எடுத்தது.)

Rajni impressed

A smiling 'Super Star' Rajnikanth was all praise for Dr Gayathri Srikanth, who along with her husband called on the actor in Chennai after the successful launch of the Tamil version of Rajnikanth's biograph 'Rajni Pera Ketalae'.

The actor made anxious enquiries about the mega event, which saw the release of the book amidst popular celebrities. The couple were accompanied by veteran director S P Muthuraman, who has rendered 25 hits with Rajnikanth playing the hero.

Rajnikanth expressed his confidence that her Tamil book too would rock just like the English version, which was released a few months ago..

[END]