Sunday, December 28, 2008

இப்படியெல்லாம் பேச ரஜினிக்கு தெரியுமா?

நான் அரசியல் ரீதியாக கேப்டனை விமர்சனம் செய்யும்போது சிலர், "உன் தலைவனை முதலில் தெளிவாகப் பேசச் சொல், அப்பறம் நீ அடுத்தவனை விமர்சனம் பண்ணலாம்." என்று கூறுகின்றனர்.

நம் தலைவர் எப்போதும் தெளிவாக தான் பேசுகிறார். இதோ அவர்களது தலைவரின் தெளிவிற்கு மற்றொரு உதாரணம்.

ஷூட்டிங்குக்காக (?!!) காரைக்குடி வந்துள்ள விஜயகாந்த் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் அளித்த பதில் இருக்கிறதே... அப்பப்பா.... தெளிவான பேச்சு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துகொள்வீர்களா?

கேப்டன் : "மும்பை தாக்குதல் எதிர் பாராமல் நடந்தது போல், தேர்தல் நேரத்திலும் கூட்டணி என்பது எதிர்பாராமல் நடைபெறலாம். அதற்காக இப்போதிருந்தே வியூகங்கள் அமைத்துகொண்டிருக்கமுடியாது."

முழு காமெடிக்கு கடைசியில் தரப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பாருங்கள்.

அப்பப்பா என்ன ஒரு தெளிவான பேச்சு....!! (காரைக்குடியில் நல்ல தண்ணிக்கு பஞ்சமா நண்பர்களே?)

மும்பை தாக்குதல் போல இவர் கூட்டணி அமைப்பதும் மக்கள் மீதான தாக்குதல் தான் போல...எதை எதனுடன் ஒப்பிடுவது என்று கூட தெரியாத இவரெல்லாம் முதல்வர் பதவி வேட்பாளராம்... அதற்க்கு ஆதரவளிக்க ஊருக்கு நான்கு பேர். எல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி... அது சரி ஊரார் எல்லாரையும் கிண்டல் கேலி செய்துவரும் இவரது திரைமறைவு கொ.ப.செ. கோணி தனது "ஐயோ" பக்கங்களில் இதை குறிப்பிட்டு குட்டுவானா? அவன் ஏதோ நல்ல எழுத்தாளன் என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களுக்காக இதை கூறுகிறேன்!!)

இதையே ரஜினி கூறியிருந்தால் இந்த மீடியா என்னென்ன செய்திருக்கும்? கமெண்ட் பகுதியில் சந்திக்கிறேன்.

குறிப்பு: கேப்டன் தனது பதிலில் கூட்டணி குறித்து எங்களை யாரும் சீந்தவில்லை என்பதை எவ்வளவு நாசூக்காக கூறியிருக்கிறார் பாருங்கள்!

[END]