Friday, August 1, 2008

குதிரை குழிக்குள் விழுந்தால்....

குதிரை குழிக்குள் விழுந்தால் எலிக்கு கூட எக்காளமாம். விழுந்திருப்பது டினோசராயிற்றே ...சும்மா இருப்பார்களா?

இந்த சோதனையான காலகட்டத்தில் நம்மை மிதிப்பவர்களை நாம் மன்னிக்கவே கூடாது...என்றும் இவர்களை நினைவில் வைத்திருங்கள்...

தலைவர் காலத்தை வென்றவர்.... ஆனால் நிச்சயம் 'காலம்' கீழ்கண்டவர்களை புரட்டி போட்டு விடும்....பார்க்கத்தான் போகிறோம்.

இவர்களின் செயல் புண்பட்டிருக்கும் ரசிகர்கள் மனதை மேலும் ரணமாக்கும் விதமாக அமைந்துள்ளது...

துரோக பட்டியல்:

சரத் குமார்

சன் டிவி தினகரன் குழுமம்

தினமலர்

டி ராஜேந்தர்

ராமதாஸ் & கோ.

மற்றும் சில தனியார் ஆங்கில தொலைகாட்சியினர்...

அடுத்த சில நாட்களில் இன்னும் நிறைய பேர் இதில் சேர விருக்கிறார்கள் . அன்புடன் வரவேற்கிறோம்...

சரி முடிவாக என் கருத்து என்ன?

இறைவன் ஒருவருக்கு மிகப்பெரிய நன்மை செய்வதுக்கு முன்னால் அவர்களுக்கு கடுமையான சோதனை ஒன்றை கொடுப்பான். அது போலத்தான் இதுவும். சோதனைக்குப்பின் சாதனை மலரும்....பொறுத்திருங்கள்...

இதற்க்கு என்ன தான் தீர்வு?

இது நரை முடி போல....ஒன்றை பிடுங்கினால் இரண்டு முளைக்கும்.

சினிமாவில் இருந்துகொண்டு இதற்க்கு தீர்வு காண முடியாது....ஒன்று ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், அல்லது சினிமாவை விட்டு விலக வேண்டும். அது ஒன்றே எதிரிகள் வாயை நிரந்தரமாக மூடும். அது வரை சந்தோஷங்களையும் சங்கடங்களையும் ஒன்றாக பாவிக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும்...

முக்கியமான ஒன்று...

எனக்கு வரும் பின்னோட்டங்களில் நிறைய பேர் சொல்வது என்ன வென்றால், கர்நாடக மார்க்கெட் போனால் போகிறது என்று விட்டு தள்ள வேண்டியது தானே...என்று....ஒரு நடிகனாக அப்படி செய்ய முடியாது...இது ஏதோ அதனுடன் மட்டும் முடிவது இல்லை.... இதை பார்த்து நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் இது போல ஒரு குரூப் கிளம்பினால் என்ன செய்வீர்கள்? படத்தை வெளியிட கூடாது; அந்த மாநிலத்தை தியாகம் செய்துவிடலாம் என்று சொல்வீர்களா... நல்ல ரசிகனப்பா நீர்...

வியாபாரத்திற்காக அவர் இப்படி செய்து விட்டார் என்று கூறாதீர்கள்....அவரை பொறத்தவரை இந்த பணம் ஒரு பொருட்டே அல்ல...அது உங்களுக்கும் தெரியும்தானே?

தன்னை அடகு வைத்து அமைதியை வாங்கியிருக்கிறான் தலைவன்...புரிந்து கொள் தொண்டனே...


படிக்க முந்தைய பதிவு....
நடந்தது என்ன?
http://onlysuperstar.blogspot.com/2008/08/blog-post.html