Sunday, November 23, 2008

கோடிட்ட தலைவன்; பூர்த்தி செய்யும் ரசிகர்கள்!!

"ன் பிறந்த நாள் ஈழத்தமிழர்களை பாதுக்காக்க தூண்டுகோலாக அமையுமானால் அதுவே என் மகிழ்ச்சி" என்று கோடிட்டு கட்டினார் ரஜினி. இதோ நம் ரசிகர்கள் களமிறங்கிவிட்டனர்.


சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான வரும் டிசம்பர் 12 அன்று ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்க மதுரை மாநகர் ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர்.

வெறும் உண்ணாவிரத போராட்டம் என்று மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக உணவு, உடை மற்றும் மருந்து ஆகியவைகளை கூட திரட்டி செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர் ரசிகர்கள். அவர்கள் போராட்டம் மற்றும் முயற்சி வெற்றியடைய நம் வாழ்த்துக்கள்.

மேற்கூறிய உண்ணாவிரதம் மற்றும் நிவாரணப் பொருட்கள் திரட்டுவது பற்றி இன்று காலை மதுரையில் ரஜினி ரசிகர்கள் செய்தியாளர்களுக்கிடையே பரபரப்புகளுக்கிடையே அறிவித்தனர். முக்கிய தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களின் நிருபர்கள் செய்தி சேகரிக்க வந்திருந்தன. ஜஸ்ட் ரசிகர்கள் அறிவிக்கும் போராட்டம் இது என்பதை நினைவில் கொள்ளவும்.

இதற்கிடையே ரசிகர்களின் ஒவ்வொரு செயலிலும் ஈழத்தமிழர்களுக்கான அக்கறை வெளிப்படுகிறது. சென்னையை சேர்ந்த ரசிகர்கள் சிலர் எழுப்பியிருக்கும் போஸ்டரில் கூட நம் நாட்டின் தற்போதைய சூழல் தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதனுடன் கூடவே ஈழத் தமிழர்களுக்கான நலனையும் வெளிப்படுத்தியிருக்கார்கள். நல்ல வித்தியாசமான சிந்தனை.

இணைக்கப்பட்டுள்ள போஸ்டரை சற்று உற்று பார்க்கவும். பாரதத்தையும் அதன் பின்னணயில் சூப்பர் ஸ்டாரின் உருவத்தையும் காணவும்.

[END]